Thursday 10 October 2019

பத்திரிகையாளர்கள் அமைதியாக இருக்கும் நாட்டில் ராணுவம் புன்னகையுடன் நுழைகிறது

வசுமித்ர




அப்படித்தான் இருக்கிறது
பத்திரிகையாளர்கள்
அமைதியாக இருக்கும்போது
நாடு
தன் நிர்வாணத்தை
அமைதி நிரம்பிய
எள்ளலுடன் ஒருமுறை கவனித்துக்கொள்கிறது

உண்மையில்
பத்திரிகையாளர்கள்
நாட்டின்
குடிமக்களுக்கு
உள்ளது உள்ளபடி
மிகநேர்த்தியாக இல்லாவிடினும்
அசிங்கமாவாவது னைக்
குடிமக்களுக்கு காட்டிக்கொடுக் வேண்டும்
மாறா
அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்

விளம்பரம்
மக்களை
அவர்கள்
விரும்பவியலாதவாறு
வெறுக்க வெறுக்க
வன்புணர்ச்சி செய்கின்றது

பத்திரிகையாளர்களோ
காகிதங்களில்
வசந்தங்களை இசைத்துக்கொண்டிருக்கின்றனர்

அறியமுடியாத துப்பாக்கிகளின் வர்ணணையை
ஆட்சியாளர்கள்
செய்திகளில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்

ஆண்களின் இறுகிய பிருஷ்டமும்
பெண்களின்
தேர்ந்தெடுக்கப்பட்ட
நளினமான சதையும்
குடிமக்களுக்கு காட்டப்படும்போது
அரசியல்வாதிகள்
அதிகாரத்தை கைப்பற்றுகின்றனர்

பத்திரிகையளர்கள் மௌனமாக இருக்கும் நாடு 
இனி உருப்படப்போவதில்லை

ஆம்
மக்கள்
நிர்வாணத்தை எப்பொழுதும்
கொண்டாடிக் கொண்டிருக்கப்போவதில்லை

நிர்வாணம் என்பது அரசின் தத்துவார்த்தச் சொல்
அம்மணம் என்பதே
மக்களின் சொல்லாக இருக்கிறது

நிர்வாணமாக இருப்பதென்பது
அரசியல்வாதிகளுக்கு உகந்ததாக இருக்கையில்
அம்மணத்தை மக்கள் வெறுக்கும்படி செய்கிறார்கள்

குழந்தைகளின் அம்மணத்தை கேலி செய்கிறது
நடிகைகளின் நிர்வாணங்கள்
நிர்வாணத்தில் நாகரிகம் செலுத்தப்படுகையில்
அம்மணத்தில் பசி தன் விகாரத்தை காண்பிக்கிறது

மக்கள்
அமைதியாய் இருக்கின்றனர்
சொல்லமுடியாத வார்த்தைகளை
திறக்க முடியாத உதடுகளால் கடித்து மென்றபடி
அம்மணக் குருதி
கசியும் வரை
மக்கள்
அமைதியாய் இருக்கின்றனர்

மக்கள்
எப்பொழுதும் இப்படியே இருக்கப்போவதில்லை

கசியும் குருதியில்
ஆட்சியாளர்களுக்கான வெடிகுண்டின்
கந்தகவாசனையை அறிந்து கொண்டிருக்கிறான்
கவிஞன்

அவன் நாசி எப்பொழுதும் மக்களை நோக்கியே
இருக்கவேண்டும் என்பதால்
அப்படியாகவே கவிஞன் 
தன்னை உற்பத்தி செய்து கொள்கிறான் 

பத்திரிகையாளர்களுக்கு
தகவல்கள் இருக்கிறது
செய்திகள் இருக்கிறது

உண்மையில் 
அழும்
குமுறும்
நெஞ்சில் அடித்துக் கதறும்
பத்திரிகையாளனே நாட்டுக்கு தேவை
பத்திரிகைகள் பொய் சொல்லுகையில்
பத்திரிகையாளன் தலைகுனிகிறான்
வரலாறு மிகுந்த வன்மத்துடன் அவனை கடந்து செல்கிறது

பத்திரிகைகளுக்கு தெரியாத 
பத்திரிகையாளன்
அல்லது கவிஞனுக்கு தெரியும்

உண்மையில்
பசித்த மக்கள்
உணவை உற்பத்தி செய்வதை விட வெடிகுண்டுகளை
உற்பத்தி செய்யவே விரும்புவார்கள்
பசி
வெடிகுண்டுகளின் புன்னகையைத் தயாரித்துவிடுகிறது

மக்கள்
புன்னகை செய்யும்போது

அரசு மௌனமாகிறது


நன்றி : http://makalneya.blogspot.com/