Tuesday 1 May 2018

இடையறாது தாக்கி மனவுறுதியைக் குலைக்கும் நவீன ஊடகங்கள்

பிரெயென் கேலகர்
தமிழில் : சத்திய நாராயணன்




மக்களாட்சியையும்சுய முடிவுகளையும்  நவீன கவனயீர்ப்புப் பொருளியல் திசைமாற்றிக் கொண்டிருக்கிறது.

அறிமுகமும் நேர்காணலும் :
ஆக்ஸ்போர்ட் பல்கலையின் மின்னணு அறத்துறையின் முனைவர் மேற்படிப்பில் இருக்கும் ஜேம்ஸ் வில்லியம்ஸூக்கு கூகிளில் வேலை செய்த போது ஏதோ ஒரு தருணத்தில்  ’இறைவாநான் என்ன செய்துவிட்டேன்’ என்று அஞ்சுமளவுக்கு இல்லாவிடினும் சிலவேளைகளில் ஏதோவொன்று சரியன்று என்று தோன்றிக்கொண்டிருந்தது.

2006ல் கூகிள் சியாட்டல் அலுவலகத்தில் சேர்ந்து விளம்பர மென்பொருட்களையும் கருவிகளையும் உருவாக்கியதற்காக ’ஃபவுண்டர்ஸ் அவார்ட்’ எனப்படும் கூகிளின் உயரிய விருதைப்பெற்றவர் வில்லியம்ஸ். பின்பு 2012 வாக்கில் அவருக்கே இம்மென்பொருட்கள் மிகவும் மனவுளைச்சலைக் கொடுப்பதாகத் தோன்றியது. என்னிடம் அவர் பேசுகையில், ’புதிய தொழில்நுட்பத் தளங்கள்,  இணையத்துக்கு முன்பான பழைய விளம்பர நுட்பங்களையேக் கையாண்டது. அதாவது எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப முடியுமோ அவ்வளவு திருப்புவதே அதன் குறிக்கோள்’ என்கிறார்.
2011ல் தன் விருப்பத் தேடலான இலக்கியம் மற்றும் அரசியல்-தத்துவத்தில் (ஜார்ஜ் ஆர்வெலின் 1984 மற்றும் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ப்ரேவ் நியூ வேர்ல்ட் மிக விருப்பமான நூல்கள்) கவனம் செலுத்த ஆசைகொண்டுகூகிள் இலண்டன் அலுவலகத்தில் வேலை பாத்துக்கொண்டே ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சேர்ந்தார் . அவர் மேலும், ’தொழில்நுட்பம் நம் மனங்களை ஆக்ரமிப்பதை நிறுத்த வேண்டும்’ என்பதையே ஒரு இயக்கமாக்க விரும்பி Time Well Spent எனும் நிறுவனத்தையும்  ஆரம்பித்து இருக்கிறார். மோமண்ட்’ எனும் செயலியுடன் இணைந்து 200,000 பேர்களிடம், ‘எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள்’ என்ற அடிப்படைக்கேள்வியுடன் தாங்கள் பயன்படுத்தும் செயலிகளை  வரிசைப்படுத்த ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. அதிலிருந்து ஒரு அவதானிப்பாக எவ்வளவு அதிகம் ஒரு செயலியைப் பயன்படுத்துகிறார்களோ அவ்வளவு தூரம் அச்செயலியினால் மகிழ்ச்சியை இழப்பதாக பதிவு செய்திருக்கிறார்கள். ’ கவனச்சிதைவு என்பது ஒரு சிறிய பிரச்சனை இங்குமேலும் ஆழமாக வேறு என்னமோ நிகழ்கிறது,  என்கிறார். அதற்காகவே இங்கு பிஎச்டி செய்ய வந்தேன்’, என்கிறார்.
சமீபத்தில் வில்லியம்ஸ், நைன் டாட்ஸ் பரிசையும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்காக புத்தகம் ஒன்று எழுத ஒப்பந்தமாயிருக்கிறார். நாட்டிலஸ், நவீன கவனயீர்ப்புசார் வர்த்தகத்தின் சூழ்ச்சிகளைக் குறித்துவில்லியம்சுடன் உரையாடியது.

ஜனநாயகத்தை இணையமும் சமூக(வலைத்தள) ஊடகங்களும் எவ்வாறு அச்சுறுத்துகின்றன?

ஜனநாயகம் சில அடிப்படைத்திறன்களை வலியுறுத்துகிறது கொள்கைசார்ந்த ஆழமான விவாதங்கள்மாற்றுத்தரப்புகளை புரிந்துகொள்ளல் மற்றும் தெளிவாக முன்வைக்கப்படும் விவாத முடிவுகள். இதுவே அரசாங்கத்தின் அதிகாரத்தையும்மக்களின் விருப்பத்தேவைகளையும் உறுதி செய்கிறது. ஒரு வகையில் பார்த்தால் இப்போது இத்தொழில்நுட்பங்கள் மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்று உணரும் தன்மையையே குலைத்துஇடையாறத சமூக ஊடகத்தாக்குதல் மூலம் செயலிழக்கவைக்கிறது. நம் வாழக்கையின் இயங்குதளங்களாக செல்பேசிகள் இருக்கின்றன. நம்மைஅவற்றைப் பாத்துக்கொண்டும்சொடுக்கிக்கொண்டுமே இருக்க வைக்கின்றது. ஒரு ஆராய்ச்சிமுடிவின்படி இடையறாத கவனச்சிதறல் மனிதர்களின் ஐ.க்யூ எனப்படும் சிந்தனைத்திறன் அளவீடு பத்து புள்ளிகள் குறைந்துவிடுவதாக அறிகிறோம். இது தொடர்ச்சியாக போதை மருந்து உட்கொண்டு குறையும் அறிவுத்திறனை விட இரண்டு மடங்கு. 

வேறு சில அறிவுசார் பிரச்சனைகளும் இருக்கின்றன. போலிச்செய்திகள் மட்டுமன்றி ஒரே சமூகத்தில் ஒரே தெருவில் இரு வேறு நிதர்சனங்கள் உணரப்படுகிறது. ஜனநாயகம் திறனுடன் இயங்க பொதுவான நிலைப்பாடுகளை எடுக்க இது பெருந்தடையாக ஆகிவிடுகிறது.
செய்தி ஊடகங்களை இத்தொழில்நுட்பங்கள் எவ்வாறு பாதிக்கின்றது?

ஒரு பூகம்பம் போலஅதிவிரைவாக,, தகவல் வரவுக்கும் ஊன்றிக் கவனித்தலுக்கும் இடையிலான தலைகீழ்விகிதத்தை நாம் கடந்துவிட்டோம். சமுதாயத்தில் உள்ள பெரும்பாலான அமைப்புகள்செய்திவிளம்பரம்மற்றும்சட்டங்களைப் பாதுகாக்கும் அமைப்புகளும்குறைந்த தகவல்கள் கொண்ட அல்லது பற்றாக்குறையான சூழலை எதிர்பார்த்தே உருவாக்கப்பட்டுள்ளது. அமரிக்காவின் முதல் சட்டத்திருத்தம்பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டதுஆனால் அது உங்கள் கவனத்திறன் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கவில்லை. அது எழுதப்பட்ட நேரத்தில் மக்களின் கவனத்தைத் தடுக்க எதுவும் உண்மையில் இல்லை. தகவல் பற்றாக்குறையான சூழ்நிலையில்செய்தித்தாளின் கடமை என்பது தகவல் கொண்டுவருவது மட்டுமே அதன் கடமையாக இருந்தது. அக்காலத்தில் தகவல்கள் குறைவாக இருந்ததே பிரச்சனையாக இருந்தது. ஆனால் இன்று அதற்கு நேர்மாறாக தகவல்கள் மிக அதிகமாக இருக்கிறது.
மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தினமும் திசைதிருப்பப்பட்டால் திசைதிரும்பிய வாரங்களும் மாதங்களாக நீண்டுவிடுகிறது.
இந்த நிலைமை எவ்வாறு செய்தித்தாள்களின் பங்களிப்பை மாற்றுகிறது?

பத்திரிகையின் பங்கு செய்திகளை வடிகட்டி மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை அளிக்கவேண்டும். ஒரு நல்ல கட்டுரை என்பது அதிக அளவில் சொடுக்கப்பட்டு படிக்கப்பட்ட கட்டுரையாக ஒரு வணிகம் போல் பத்திரிகைகள் செயல்பட்டால்கருத ஆரம்பித்தால் நமக்கு பரபரப்புத் தலைப்புளே கிடைக்கும்ஏனெனில் இன்று வணிக நிர்பந்தங்களாக இந்த அளவீடுகள் தான் இருக்கின்றன. தகவல் ஏராளமாக இருக்கும்போதுகவனக்குறைவு ஏற்படுகிறது. விளம்பரத்துக்கான இந்த அளவீடு எல்லோரையும் கீழே இழுத்துச்செல்கிறதுஉயரியதரமான செய்திநிறுவனங்கள் கூட இந்தப் புதிய அளவீடுகளோடு போட்டியிட வேண்டி இருக்கிறது. இதனால்ஒவ்வொரு வாரமும் இணையத்தில் பெருஞ்சீற்றங்கள் தொடர்ச்சியாக உருவான வண்ணம் உள்ளது. சீற்றம் என்பது நமக்கு ஒரு அவசியமான தேவையாக இருக்கிறதுஏனென்றால் அது நமக்கு தேவையான பலவகையான உளவியல் தேவைகளை பூர்த்தி செய்கிறது. நம் கோபம் நம்மை முன்னோக்கி நகர்த்த உதவுவதற்கு பயன்படலாம்ஆனால் பெரும்பாலும்நம்மை மேலும் கட்டுரைகளைச் சொடுக்கி,மேலும் மேம்போகாக வாசித்துதட்டச்சு செய்ய வைக்கிறது.. இணையப் பயன்பாட்டினைப் பற்றிய முதல் புத்தகங்களில் ஒன்றின் பெயர், Don’t Make me Think. மூளையின் பகுத்து அறியும் திறன் மங்கவைக்கப்பட்டு மனக்கிளர்ச்சியடைய வைக்கும் பகுதிக்கே அதிகத் தீனி போடப்படுகிறது.
டிரஸ்டன் ஹாரிசுடன் இணைந்து Time Well Spent நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். பில்லியன் மக்கட்த்தொகையை அரசாங்கங்ளையும் மத நிறுவனங்களையும் விட மிகப்பெரிய நிறுவனமாக தொழில்நுட்பம் வழிநடத்துகிறது என்கிறார் அவர். அதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?

நான் அக்கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் இத்தனை ஆர்வமாக ஒன்றீன் மீது இவ்வளவு நேரத்தையும் கவனத்தையும் செலவழிக்கும் அளவுக்கு நவீன செல்பேசிகளையும் சமூக ஊடகங்களையும் ஒப்பிடத்தக்க ஒரு அரசாங்க அல்லது மத அமைப்பு போன்ற முறையை எனக்குத் தெரியாது. அதுவும் இத்தனை அதிக வீச்சிலும்பயன்பாட்டிலுமாக வேறெதுவும் ஆதிக்கம் செலுத்துவதில்லை. அதுவும் மக்களிடம் மிக ஆழமாக நெருக்கமாக ஆதிக்கம் செலுத்துகிறதுஅரசாங்கத்தின் அல்லது மத அமைப்புமுறைகளை விட மக்களின் கவனத்திற்கு நெருக்கமாக உள்ளது. ஒரு வேதிவினைபோல ஒரு வகை போதை மருந்து போன்றது என்று நான் கருதுகிறேன். எடுத்துக்காட்டாக, Snapchatல் Snapstreak என்று ஒன்று இருக்கிறது, “எத்தனை நாட்கள் தொடர்ச்சியாக யாரோ ஒரு நண்பருடன் புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள்” என்று வினவுகிறது. இதன்மூலம் நீங்கள் உங்கள் சமூக இருப்பை உங்கள் நட்பிடம் உறுதி செய்யக் கோருகிறது. இந்த வகையான அளவீடுகள் பகுத்தறிவற்ற சார்புகள் பல்லாயிரம் உருவாக்கப்படுகின்றன- சமூக ஒப்பீடு என்பது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்குவது. நிர் எயல் என்பவர் தள வடிவமைப்பாளர்களுக்கு ஒரு பயனாளியை எவ்வாறு எப்படி ஈர்ப்பது என்று கற்பிக்க, Hooked என்றொரு புத்தகத்தையேஎழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கட்டுரையில் ஜனநாயகத்துக்கு தேவையான மூன்று வகையான கவனத்தை இத்தொழில்நுட்பங்கள் சிதைப்பதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அவை எவை?

இது ஒரு கருத்தாக்கம்தான். அறிவியல் பூர்வமானதல்ல. முதலாவதுஅறிவாற்றல் குறித்து ஆராய்வோர்நம் கவனம் எவ்வாறு புலன்னுணர்வுகளால் நிகழ்கிறது என்பதைப் பற்றி. இதை நான் கவனத்தின் சுயஒளி’ என்று கூறுவேன். என் சூழலில் நிகழ்வதை அறிந்து கொண்டு வினையாற்றுவது. இரண்டாவது நட்சத்திர ஒளி’. இது நான் என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறேன் என்பதைக் குறித்த கவனம். வேறதையோ அடைவதற்கான வழிகாட்டியாக இல்லாமல் நேரடியான குறிக்கோள். நீண்ட கால நேரடியான குறிக்கோள் குறித்த கவனம். மேலும் அதைநோக்கி நம் நகர்தல்கள் எவ்வாறு நிகழ்கின்றன என் இன்றைய சூழலில் அதை நோக்கிய பயணத்தில் உயர்ந்த அல்லது நீண்ட கால குறிக்கோள் குறித்து நாம் என்ன செய்கிறோம் என்பதைக் குறித்தானது.
மூன்றாவது, ‘பகல் ஒளி’ தத்துவவாதி ஹேரி ப்ராங்கபர்ட் சொல்வதைப்போல்தன் தேவைக்கு என்ன தேவை என்று அறிவது- அதாவது சுய அறிதலறிவு. அடிப்படையில், ’சுய ஒளி’ யும்நட்சத்திர ஒளியும் ஏதாவது ஒரு குறிக்கோளை நோக்கிஒரு முடிவை நோக்கிஒரு விழுமியத்தை அடையபகலொளி என்பது அந்த குறிக்கோள் என்னமுடிவு என்ன என்று அறுதியிட்டு முடிவு செய்ய வைப்பது.
நம் சுய ஒளித்தருணங்களை எவ்வாறு இத்தொழில்நுட்பங்கள் வசப்படுத்திச் சிதைக்கின்றன என்று புரிகிறது. ஆனால மற்ற இரண்டை எவ்வாறு பாதிக்கிறது?

ஒருவகையில்இவை நமக்கு கெட்டபழக்கங்களை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரே வகையில் நீங்கள் சிறிது சிறிதாக கவனத்தை திசை திருப்பினால்திசை திரும்புதல் வாரங்களாகமாதங்களாக நீடிக்கிறது. திரும்பத்திரும்ப செய்வதாலோ அல்லது வேறெதோ ஒரு காரணத்தாலோ நாம் அடைய வேண்டிய நீண்ட கால, ’நட்சத்திர ஒளியை’ அடையாத ஒரு பாதிப்பை அல்லது எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை அடையாமல் அல்லது அதை வலியுறுத்தும் விதமாகக்கூட இல்லாமல் மறக்கடிக்கப்பட்டுவிடுகிறோம். இது மிகக் கீழ்மையான குறிக்கோள்களை சிறுமையான விழுமியங்களையே ஒரு நிகழ்வாக மாற்றிக்கொண்டு இருக்கிறது. என் அணி வெற்றிபெற்றால் போதும்முழுமையாக அரசியல் சூழலும் நச்சுத்தன்மையுடையதாக ஆனாலும் பரவாயில்லை என்பதே ஒரு சிந்தனையாக மாறுகிறது.
நம் அரசியலை எவ்வாறு இத்தொழில்நுட்பங்கள் மாற்றுகிறது?

மேற்கத்திய தாராளவாத ஜனநாயகத்தை மிக அழுத்தமாக பெரும்பான்மை மக்களீர்ப்புஅரசியலாக மாற்றிக்கொண்டு இருக்கிறது. பொதுவாக எல்லாப்பெரிய சமூகத்திலும் பெரும் ஊடங்கள் இருக்கின்றன. எனக்கு இவை எல்லாமே இம்மாதிரிஅரசியலையே முன்வைப்பதாகத் தோன்றுகிறது.இது ஒன்றும் புத்தியக்கம் அல்லமுன்பே இருப்பதுதான். ஆனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக வீச்சில் அதீத வேகத்தில் ஊட்டத்துடன் இது இப்போது நிகழ்கிறது. செய்தித்தாள்தந்தி இருந்த காலத்தில்ஏன் தொலைக்காட்சி வந்த காலத்தில் கூட இதுபோதுபோன்று நிகழ வாய்ப்பு இருந்ததாக நினைத்துப்பார்க்க இயலவில்லை.
1930களில் வானொலி பரவியபோதுகூட அதை ஜனநாயக விரோதமாகத்தானே பத்திரிகைகள் சித்தரித்தன?

ஹிட்லரின் எழுச்சியில் வானொலியின் பெரும் பங்களிப்பு உண்டு. அதனால்தான் அவர் அதை எல்லா வீடுகளுக்கும் கிடைக்க வழிசெய்தார். இது ஒரு நல்ல ஒப்பீடு. மார்ஷல் மக்லுஹான் எனும் கனேடிய ஊடகவியலாளர் இதைப்பற்றிக்குறிப்பிட்டதுஒரு புதிய தொழில்நுட்பம் வரும்போதுநமக்கு எப்படி அதை புரிந்துகொள்வது என்று தெரியாதுஆரம்ப காலத்தில் ஒருவித பிரமையில் இருப்போம்நம் புலன் உணர்வுகள் ஸ்தம்பித்துவிடுகிறதுஹிட்லரின் அபாரமான பேச்சாற்றல் மட்டுமல்லாது புதிய ஊடகம் மக்களின் வாழ்க்கையில் அளவிட முடியாத அளவுக்கு ஆக்ரமிப்பு செய்து ஸ்தம்பிக்கும் நிலைக்குத் தள்ளியது பரப்புரையை மேலும் அதிகப்படுத்தியது என்கிறார்.
தேர்வு என்பது மிகவும் குழப்பமானதுஅதில் ஆழமாக ஊடுவிப்பார்க்க ஆரம்பித்தால் நமக்கு எப்படி ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது என்பது புலப்படும்.
காலப்போக்கில் நாம் புதிய ஊடகங்களுக்குப் பழகிவிடமாட்டோமா என்ன?

வானொலி தொலைபேசி முதலியவற்றின் தாக்கத்திலிருந்து விலகி வர எத்தனை காலம் பிடித்தது என்று யோசித்துப்பாருங்கள்கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் எடுத்தன. மின்னணு ஊடகங்கள்மேம்படப்பட ஒரு எடுத்துக்காட்டு அளவாக சுமார் 150 மில்லியன் பயனர்களை அடைவதற்கானநேரம் குறைந்துகொண்டே போகிறது. வானொலிக்கு 60 அல்லது 70 ஆண்டுகள் ஆயிற்று என்று நினைக்கிறேன். தொலைக்காட்சிக்கு 30 அல்லது 40 ஆண்டுகளாயிற்று. இன்றைய தொழில்நுட்பத்தில்சிறு செயலிக்கு 150 மில்லியன் பயனர்களை அடையஅது ஒரு சில நாட்களாக இருக்கலாம். நாம் நொழில்நுட்பத்தை முழுக்க உள்வாங்கி அதில் திறம் மிக்கவர்களாக ஆகி நிலைத்தன்மையை அடைவதே இல்லை. எப்போதும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறோம். நன்றாகப் பயன்படுத்த முனைகிறோம் ஆனால் அடுத்து இன்னொன்று வந்து நாம் நுட்பத்தில் தேர்ந்து சமநிலை அடைவதை தடுத்துவிடுகிறது.
இவ்வாறு கவனம் சிதறுவதுநம்முடைய குறைதானேநமக்குக் கொஞ்சம் சுய ஒழுக்கம் மட்டும் இருந்தால் போதாதா?

இதுபோன்றதொரு சொல்லாடல்கள் உள்ளார்ந்து சொல்ல வருவதுநுட்பங்கள் நமக்கு எதிரானதாக இருந்தாலும் பரவாயில்லை என்பதுதான். தொழில்நுட்பங்களின் பணி என்பது நாம் என்ன செய்யவெண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கு மேலும் உதவிகரமாக இருப்பதுதான். தொழில்நுட்பங்களீன் தேவை வேறன்னஒரு புதிய தொழில்துட்பத்தை உருவாக்கும் முன்பு நாம் கேட்கும் கேள்வி என்னவாக இருக்க வேண்டும்?, ‘இது எதற்காக’ என்று. ஆனால் நாம் அறியாமலேயே இந்நிறுவனங்கள் சென்றடைந்த இடம் என்பதுஇந்த ஸ்மார்போன் எதற்காக என்று கேட்டால் ஒரு ஸ்மார்ட்போனால் என்ன செய்யவியலுமோ அதுவே அதன் பயன் என்ற கேலிக்குரிய பதில்தான் கிடைக்கிறது.
தனிநபர் பொறுப்பு ஒரு பொருட்டே இல்லையா?

தனிநபர் பொறுப்பு முக்கியமானதல்ல என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது இந்தப்பிரச்சனைக்கான தீர்வு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதைக்குறித்து தினம் தினம் பேசும் ஆட்களுமேஏன் நானுமே – கூகிளில் பத்து வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன் – நாங்களேஓயாமல் அளவுக்குமீறிய தகவல்கள் எங்களை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவச்செய்யும் என்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்நிறுவனங்கள் திறமைமிக்க புத்திசாலிகளைஆயிரக்கணக்கில் முனைவர்களையும்வடிவமைப்பாளர்களையும்புள்ளியிலாளர்களையும்பொறியாளர்களையும் பணியமர்த்தியுள்ளன. அவர்கள் தினமும் நம் உள்ள உறுதியை உடைக்கவேண்டும் என்ற ஒற்றைக்குறிக்கோளுக்காகவே பணிக்குச்செல்கிறார்கள்ஆகவே உள்ள உறுதியோடு இருங்கள் என்பது யதார்த்தமான யோசனையன்று. அதை உடைப்பதுதானே குறிக்கோளாக இருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் நமக்குச் சாதகமாக நிற்கிறதென்று கருதுகிறீர்களா?

நம் கவனத்தை கவர்ந்து நம்மை திசைத்திருப்பும் குறிக்கோள் என்ற அளவில் அது நமக்கு சாதகமானதில்லை. அதற்கு நம் குறிக்கோள் என்ன என்றுகூட இத்தொழில்நுட்பங்களுக்குத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. அதுகுறித்த ஒரு உரையாடல் நிகழந்து சரியான திசையில் நகர்வது அவசியம். ஜிபிஎஸ் தொழில்நுட்பம் ஒரு சிறந்த முன்மாதிரியான உதாரணமாகக் கூறுவேன். மெய்யுலகில் ஜிபிஎஸ் நம்மை தகவல்நுட்பம் போலவே கவனம்சிதறச் செய்தால்யாருமே ஜிபிஎஸை பயன்படுத்தமாட்டோம்.
வசப்படுத்தும் நுட்பங்களை நாம் எவ்வாறு நம்மை கவனயீர்ப்புச்செய்வதிலிருந்து நிறுத்துவது?

பல்வேறு தளங்களில் இது நிகழவேண்டி இருக்கிறதுவணிகமுறைகள்கட்டுப்பாடுகள்நிறுவன அமைப்புகள்அதன் செயல்பாடுகள்முன்னுரிமைகள் என மாற்றவேண்டி இருக்கிறது.
உடனடியாக நாம் செய்ய வேண்டிய முக்கியமானதுபிரச்சனையின் தன்மை பற்றிய மொழியை மாற்றவேண்டியதுஏனெனில்சரியான மொழியில் இந்த உரையாடல் நிகழாவிட்டால் இதை பரப்புரை செய்வது கடினம். சிலவேளைகளில் நாம் கவனச்சிதறல் எனவோகவனயீர்ப்பு என்றோ கூறும் போது அது உடனடித்தன்மை குறித்தே கவனிக்கிறோம்நீண்ட கால வாழ்வின் தாக்கத்தைகுறித்தல்ல.
அதற்கு எத்தனை காலமாகும்?

இது உடனடியாக நிகழந்துவிடாது. ஏனெனில் மனிதப்பண்புகளும்தொடர்புகளையும் குறித்து நாம் சரியாக உரையாடவேண்டும். பெருமளவில்,குறிப்பாக அமரிக்காவில் இது தனிநபர்த் தேர்வுகளின் விருப்பம் என்ற அளவிலே நிகழ்கிறது. என் உள்ளுணர்வில்இது என் உள்ளுணர்வு மட்டுமேஇதை நாம்நாம் விருப்பத்தின் தேர்வுகளாகப்உரிமைகளாக்கப் பார்க்காமல்வாய்ப்பாக – எந்த வாய்ப்பு நமக்கு மேன்மையானதுஇவற்றால் நிஜத்தில் என்ன நிகழ்கிறது- என்று உரையாடுவது நல்லது. தேர்வு என்பது மிகவும் குழப்பமானதுஅதில் ஆழமாக ஊடுவிப்பார்க்க ஆரம்பித்தால் நமக்கு எப்படி ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது என்பது புலப்படும்.
நம்மை திசைதிருப்புவதிலிருந்து நிறுத்த நிறுவனங்கள் உடனடியாக ஒன்றே ஒன்றைசெய்யவேண்டும் என்றால் என்ன பரிந்துரைப்பீர்கள்?

என் நடத்தையைசிந்தனையை மாற்றக்கூடிய ஒரு தளத்தின்இணையப்பக்கத்தின் வடிவமைப்புக் குறிக்கோள் என்ன என்று நானறிய விருப்புகிறேன். எனக்கான எந்த அனுபவத்துக்காக வடிவமைப்பு செய்யப்படுகிறது. நிறுவனங்கள்உலகை திறந்தவெளியாக்கஇணைக்க என்று ஏதோ ஒரு காரணத்தைக் கூறுவார்கள்.
இவை எல்லாம் சந்தைப்படுத்தலுக்கான கோஷங்கள். ஆனால் உண்மையில் அவர்கள் எதைத் தங்கள் நிறுவன வெற்றிக்கான அளவீடுகளாக வைத்திருக்கிறார்கள் என்று கவனித்தால் எதைவைத்து வடிவமைக்கிறார்கள் என்று கவனித்தால் நீங்கள் இதையெல்லாம் காணமுடியாது. எத்தனை முறை பயனர்கள் வருகிறார்கள்எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள்இதுபோன்றே இருக்கும். உங்களிடம் ஒரு செயலியின் பயனராக, ‘இதை மட்டுமே உங்கள் கவனம் சம்பந்தமாக எதிர்பார்க்கிறோம்’ என்று நேரடியாக்கூறினால் அதுவே பெரிய வெற்றியாக இருக்கும். இதை வைத்தே நான் எந்தச் செயலியை தரவிறக்கி பயன்படுத்துவேன் என்று முடிவுசெய்வேன்.
உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

இந்நிறுவனங்களில்தனிநபராக வேலை செய்வோரைக்கருதும்போது மிகுந்த அறுதலும் நம்பிக்கையும் இருக்கிறது. ஏனெனில்யார் இதை உருவாக்குகிறார்களோவடிவமைக்கிறார்களோ கடைசியில் அவரும் ஒரு பயனரே. யாருமே வாழ்க்கையை சிதைக்கவென்றே வடிவமைக்கப் புகுவதில்லை. ஆனால் பிரச்னை என்பது நிறுவனங்களின் கட்டுமானங்களிடம் உள்ளதுஅல்லது நிறுவனத்தின் குறிக்கோள்களில் இதுபோன்ற உயர்ந்த உன்னத குறிக்கோள்களுக்கு இடமில்லாமல் உடனடி குறிக்கோள்களைசிறுமைகளை முன்னிறுத்துவதாக இருக்கிறது. தொலைநோக்கில் சிந்தனை செய்தால் நம்பிக்கை வைப்பதா வேண்டமா என்பது கடினமாக இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் நாம் திசையை மாற்றவில்லையென்றால் நம் நிறுவனங்களின் குறிக்கோள்களை மறுபரிசீலிக்கவில்லையென்றால் இதை நாம் நெடுந்தூரம் கொண்டு செல்லவியலாது என்பதை உணர்வோம் என்று நம்புகிறேன்.

குறிப்பு :
இந்தப் பேட்டி பல புதிய கலைச்சொற்களைக் கொண்டது எனவே சவாலானதுதான். ஆனால் சில முக்கிய கருத்துக்களை சரியாக மொழிபெயர்ப்பது முக்கியம். ஆனால் இந்த மொழிபெயர்ப்பு அப்படி அமையாததால் இது மூலத்திலிருந்து விலகியும்தெளிவற்றதுமாக இருக்கிறது.
Freewill என்பதை மனஉறுதி என்று தலைப்பில் மொழிபெயர்த்ததிலிருந்தே இந்தக் குழப்பம் ஆரம்பிக்கிறது.
”In your essay, you argue that the way these technologies ’indulge our impulsive selves’ breaks three kinds of attention necessary for democracy. What are they?”
என்பதை
உங்கள் கட்டுரையில் ஜனநாயகத்துக்கு தேவையான மூன்று வகையான கவனத்தை இத்தொழில்நுட்பங்கள் சிதைப்பதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அவை எவை?”
என்று மொழிபெயர்க்கும்போதுஅதன் சாரத்தை இழந்துவிடுகிறது.
இருந்தாலும் விவாதத்துக்குரிய இந்தக் கட்டுரையை தமிழில் தந்ததற்கு வாழ்த்துகள்.

Sunday 29 April 2018

கலை பற்றிய கம்யூனிஸ்ட் கொள்கை (1923)

லியோன் ட்ரொட்ஸ்கி


தொழிலாளர்களால் தான் புரட்சிகரக் கலையை தோற்றுவிக்க முடியும் என்பது உண்மையல்ல. நாம் முன்னரே கூறியதை மறுபடியும் கூறுவோமாயின்புரட்சி என்பது ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சி என்பதாலேயேஅது கலைக்காக தொழிலாள வர்க்க ஆற்றலை மிகக் குறைந்தளவில் தான் செலவிடுகிறது. பிரெஞ்சு புரட்சிக் காலத்தில்அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ பிரதிபலித்த உயர்ந்த படைப்புக்கள் பிரெஞ்சு கலைஞர்களால் தோற்றுவிக்கப்படவில்லைமாறாகஜேர்மனியஆங்கில மற்றும் ஏனைய நாட்டவரால் தோற்றுவிக்கப்பட்டன. புரட்சி உருவாக நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த பிரெஞ்சு பூர்ஷூவாஅதன் அடிச்சுவட்டை மீண்டும் தோற்றுவித்துநிலைநிறுத்துவதற்கு அதன் வலிமைக்குப் போதிய தரத்தை அளிக்க முடியவில்லை. இது பாட்டாளி வர்க்கத்திற்கு இன்னும் சரியாக பொருந்துகிறதுபாட்டாளி வர்க்கம் அரசியலில் கலாச்சாரத்தைக் கொண்டிருந்த போதினும்கலையில் சிறிதளவே கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறது. வடிவத்தில் தங்களின் தகுதிகளின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டுஅறிவுஜீவிகள் ஓர் செயலற்ற அரசியல் நிலைப்பாட்டை தக்க வைத்திருந்ததில் வெறுக்கத்தக்க முன்னுரிமையைக் கொண்டிருக்கிறார்கள். இதை அக்டோபர் புரட்சியில் அவர்கள் காட்டிய கூடிய விரோதப் போக்கு அல்லது குறைந்த நட்புத்தன்மையில் காணமுடிகிறது.

ஆகவேபுரட்சியைத் தோற்றுவித்த பாட்டாளி வர்க்கத்தைவிட இந்த சிந்தனைவயப்பட்ட அறிவுஜீவிகள் கூட்டத்தால் புரட்சியைப் பற்றிய ஒரு சிறந்த கலைத்துவ உருவாக்கங்களை (அவை சற்றே பிறழ்ந்து இருந்தன என்ற போதினும்) கொடுக்க முடிந்ததுடன்கொடுத்தும் வருகின்றன என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உடன்பயணிப்பவர்களின் அரசியல் மட்டுப்படுத்தல்கள்உறுதியற்ற தன்மைபொறுப்பின்மைகள் நமக்கு நன்றாக தெரியும். ஆனால் பில்ன்யக்கின் The Naked Year ஐயும்அத்துடன் அவரையும் நாம் நீக்கிவிடுவோமேயானால்சிவ்லோட் இவானோய்திக்கோனோய்போலன்ஸ்கியா ஆகியோருடன் “Serapion Fraternity” ஐயும் ஒதுக்கிவிடுவோமேயானால்மாயாகோவ்ஸ்கி மற்றும் யென்னின் ஆகியோரையும் நீக்கிவிட்டால்வருங்கால பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கு கடந்தகாலத்தின் அருமையான குறிப்புகளில் ஏதேனும் மிஞ்சுமாஅதிலும் குறிப்பாக டெம்யன் பெய்ட்னியை உடன்பயணிப்பவர்களுடன் சேர்க்க முடியாது என்றும்புரட்சிகர இலக்கியத்துடன் தொடர்புபடுத்த முடியாது என்றும்குஜ்னிட்சா அறிக்கையில் (manifesto of the Kuznitsa) வரையறுக்கப்பட்ட விதத்தில்பாட்டாளி வர்க்க இலக்கியத்தோடு அவரை தொடர்புபடுத்த முடியாது என்றும் நாம் நம்புகிறோம். அப்படியானால்பின்னர் நமக்கு என்ன எஞ்சியிருக்கும்?

கட்சிஅதன் இயல்புக்கு மாறாகமுற்றிலும் ஓர் பல தத்துவங்களின் கருத்துக்களை தேர்ந்தெடுத்து இணைத்துக் கொள்கின்ற (eclectic) நிலைப்பாட்டைக் கலைத்துறையில் கொண்டிருக்கிறது என்பதையா இது குறிக்கிறதுமிக கடுமையாக தெரியும் இந்த வாதம்உண்மையில் மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. புதிய கலையின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான மற்றும் அதன் அனைத்து ஆதாரங்களையும் ஆராய்வதற்கான மற்றும் அதன் பாதையில் ஓர் அதிநுட்பமான வெளிச்சத்தையளித்து மிகவும் முற்போக்கான போக்குகளுக்கு உதவுவதற்கான வாய்ப்புகளை மார்க்சிச அணுகுமுறை அளிக்கிறது. ஆனால் அதைக் கடந்து அது எதையும் அளிப்பதில்லை. கலை தன்னுடைய சொந்தக் கருவிகளை கொண்டுஅதன் சொந்தப் பாதையை உருவாக்கி கொள்ள வேண்டும். மார்க்சிச அணுகுமுறைகள் கலைத்துறையைப் போன்றதல்ல. கட்சிபாட்டாளி வர்க்கத்தை வழிநடத்துகின்றதே தவிர வரலாற்றின் வரலாற்று நிகழ்சிபோக்குகளுக்கு அல்ல. நேரடியாகவும்கட்டாயமாகவும் கட்சி தலைமையெடுத்துச் செல்வதற்கான துறைகள் (domains) உள்ளன. அதேசமயம்சில துறைகளுக்கு அது ஒத்துழைப்பை மட்டுமே அளிக்க முடியும். இறுதியாகவேறுசில துறைகளோடு அது தன்னைத்தானே ஒன்றுபடுத்திக்கொள்ள மட்டுமே முடியும். கட்சி அதிகாரம் செலுத்த முடியாத துறைகளில் ஒன்று தான் கலைத்துறை. கட்சியானது கலையைப் பாதுகாத்துஅதற்கு உதவ வேண்டும்அதனால் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் அதனால் கலைக்கு மறைமுகமாக மட்டுமே தலைமை கொடுக்க முடியும். புரட்சியை அணுக நேர்மையோடு போராடி கொண்டிருக்கும் பல்வேறு கலைக்குழுக்களுக்குக் கூடுதலான நம்பிக்கையை அதனால் அளிக்க முடியும்அளிக்கவும் வேண்டும். அதன் மூலம் அது புரட்சியின் ஒரு கலைத்துவ வடிவத்திற்கு உதவுகிறது. ஏனைய இலக்கிய வட்டங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் மற்றும் போட்டியிட்டு கொண்டிருக்கும் ஓர் இலக்கிய வட்டத்தின் இடத்தை எவ்விதத்திலும் கட்சியால் எடுக்க முடியாதுஎடுக்கவும் எடுக்காது.

தொழிலாள வர்க்கத்தின் முழுமைத்தன்மையில்அதன் வரலாற்றுரீதியான நலன்களுக்கு கட்சி பாதுகாப்பளிக்கிறது. ஏனென்றால்அது நனவுபூர்வமாகவும்படிப்படியாகவும் ஒரு புதிய கலாச்சாரத்திற்கும்அதன் மூலம் ஒரு புதிய கலைக்கும் அடித்தளத்தை அமைக்கிறது. அவ்வாறான கலைஉடன்பயணிக்கும் இலக்கியவாதிகளை தொழிலாள வர்க்க எழுத்தாளர்களின் போட்டியாளர்களாக அல்லாமல்மறுகட்டமைப்பெனும் பெரும்பணியில் தொழிலாள வர்க்கத்திற்கு நிஜமாகவும்ஆக்கபூர்வமாகவும் உதவக்கூடியவர்களாக மதிக்கும். ஒரு இடைமருவு காலத்திலிருக்கும் இலக்கியக் குழுக்களின் தற்காலிகத் தன்மையை கட்சி நன்கு புரிந்துகொண்டுஅவற்றை மதிப்பிடுகிறது. தனிப்பட்ட அருமையான இலக்கியவாதியின் வர்க்க நிலைப்பாடுகள் என்ற கண்ணோட்டத்தில் அல்லாமல்இக்குழுக்கள் இடம்பெற்றிருக்கும் இடத்தையும்ஒரு சோசலிச கலாச்சாரத்தை உருவாக்குவதில் அவை ஏற்கக்கூடிய இடத்தையும் பற்றிய கண்ணோட்டத்தில் இதைச் செய்யும். எந்த குழுவினதும் இருக்கும் இடத்தை கட்சியால் இன்று தீர்மானிக்க சாத்தியப்படவில்லை என்றால்பின்னர் அந்த கட்சியானது கட்சியென்ற முறையில் பொறுமையாகவும்சகிப்புணர்வோடும் காத்திருக்கும். தனிப்பட்ட விமர்சகர்களும்வாசகர்களும் முன்கூட்டியே ஏதேனும் ஒரு குழுவிடம் பரிவுணர்வு காட்டலாம். ஆனால்மொத்தத்தில்கட்சியானது தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களைப் பாதுகாக்கிறதுமேலும் அது கூடுதலான புறநிலைத்தன்மையோடும்புத்திசாலித்தனத்தோடும் இருக்க வேண்டும். இதன் எச்சரிக்கையுணர்வு இருபுறமும் கூர்மையாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் அதற்காக எழுதுகிறார்கள் என்பதற்காக குஜ்னிஸ்டா (Kuznista) மீது தன்னுடைய ஒப்புதல் முத்திரையைக் கட்சி அளிக்காவிட்டால்முன்கூட்டியேஅது அறிவுஜீவிகள் மத்தியிலும் கூடஎந்த இலக்கியக் குழுவையும் ஒதுக்குவதில்லை. இவ்வாறு இதுபோன்றதொரு குழு புரட்சியை அணுக முயற்சிக்கிறதுமேலும் நகரத்திற்கும்கிராமத்திற்கும் இடையிலான அல்லது கட்சி உறுப்பினருக்கும்கட்சி-சாராதவருக்கும் இடையிலானஅல்லது அறிவுஜீவிக்கும்தொழிலாளர்களுக்கும் இடையிலான பிணைப்புகளில் (ஒரு பிணைப்பென்பது எப்பொழுதும் ஒரு பலவீனமான புள்ளியாகவே இருக்கிறது) ஒன்றை வலுப்படுத்த முயற்சிக்கிறது.

எவ்வாறிருப்பினும்கலைத்துறைக்குச் சாதகமாக ஒரு பாதுகாப்பற்ற நிலைப்பாட்டை கட்சி எடுக்கும் என்பதையா இதுபோன்றவொரு கொள்கை குறிக்கிறதுஇது பெரிதும் மிகைப்படுத்தலாக இருக்கிறது. கலையில் வெளிப்படையாக இருக்கும் நச்சுத்தன்மையையும்சிதைக்கும் போக்குகளையும் கட்சி விலக்கி ஒதுக்கும்அதேசமயம்அதன் அரசியல் தரமுறைகளைக் கொண்டு அதுவே கலைத்துறைக்கு வழிகாட்டும். எவ்வாறிருப்பினும்அரசியல் அணியிலிருப்பதைவிட கலையின் ஒருபகுதி குறைவாகவே பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இது விஞ்ஞானத்திற்கும் உண்மையாக இல்லையாகலப்படமில்லா பாட்டாளி வர்க்க விஞ்ஞானத்தின் மாறாநிலைவாதிகள்சார்புவாத தத்துவம் குறித்து என்ன கூறப்போகிறார்கள்இதை சடவாதத்துடன் சமரசப்படுத்தப்பட முடியுமாமுடியாதாஇந்த பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுவிட்டதாஅப்படியானால்எங்கேஎப்போதுஎவரால்எமது உடற்கூறு வல்லுனர் பாவ்லோவ் முற்றிலும் சடவாத வழிவகையில்தான் இருக்கிறார் என்பது எவருக்கும்இது குறித்து அறிந்திராதவர்களுக்கும் கூடதெளிவாகத் தெரியும். ஆனால் பிராய்டின் உளப்பகுப்பாய்வு (psychoanalytic) தத்துவம் குறித்து ஒருவர் என்ன கூறுகிறார்கார்ல் ரடெக் நினைப்பது போல் (நானும் கூட)சடவாதத்துடன் இதை சமரசப்படுத்தப்பட முடியுமா அல்லது இது அதற்கு விரோதமாக உள்ளதாஇதே கேள்வியை அணு அமைப்பின் மற்றும் இதரபிற அனைத்து புதிய தத்துவங்களின் மீதும் எழுப்ப முடியும். இந்த புதிய பொதுக்கருத்துக்களை முறையாக உள்வாங்கக்கூடிய மற்றும் உலகின் இயங்கியல் சடவாத கருத்துருவிற்குள் அவற்றை அறிமுகப்படுத்தக்கூடிய ஒரு விஞ்ஞானி வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதேநேரம்இதன்மூலம் அவரால் இந்த புதிய தத்துவங்களை பரிசோதிக்கவும்இயங்கியல் முறையை ஆழமாக அபிவிருத்தி செய்யவும் முடியும். ஆனால் இத்தகைய படைப்பை-ஒரு செய்தித்தாள் கட்டுரை அல்லது இதழியல் கட்டுரைப் போலில்லாமல்உயிரினங்களின் தோற்றம் மற்றும் மூலதனம் (Origin of Species,Capital) போன்றுஒரு விஞ்ஞான மற்றும் மெய்யியல் படைப்பாக இருக்கக்கூடியதை-இன்றோ அல்லது நாளையோ செய்துவிட முடியாது என்பதையும்மாறாகஇதுபோன்ற சகாப்தத்தை-உருவாக்கும் புத்தகங்கள் இன்று உருவாக்கப்பட்டாலும் கூடபாட்டாளி வர்க்கம் அதன் கரங்களில் இருந்து ஆயுதங்களை அப்பால் வைக்கமுடியும் காலம் வரைஅபாயம் நீங்காமல் தான் இருக்கும் என்பதையும் நினைத்து நான் வருந்துகிறேன்.

இந்த கலாச்சாரத்தை தாங்கிபிடித்திருக்கும் படைப்பானதுஅதாவதுபாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்திற்கு முந்தைய ஆரம்ப அடிப்படைகளை எடுத்துக்கொள்ளும் படைப்பானதுவிமர்சனம்விருப்பத்தேர்வு மற்றும் ஒரு வர்க்கத்தரம் இருப்பதாக கருதுகிறதாநிச்சயமாக அது கருதவில்லை. ஆனால் இந்த நிலைப்பாடானது அரசியல்ரீதியாக இருக்கிறதேயொழியஅருவமான கலாச்சாரரீதியான ஒன்றாக இல்லை. புரட்சி தான் ஒரு புதிய கலாச்சாரத்திற்கான நிலைமைகளை உருவாக்குகிறது என்ற ஒரேயொரு அர்த்தத்திலேதான் அரசியல் நிலைப்பாடானதுகலாச்சாரத்துடன் பரந்த தன்மையில் ஒத்திசைகிறது. ஆனால்அத்தகைய ஒத்திசைவு அளிக்கப்படும் அனைத்து விஷயத்திலும் பாதுகாப்பாக இருக்கிறது என்றாகிவிடாது. தேவைப்படும்போது பாலங்களையும்கலைச்சின்னங்களையும் அழிப்பதற்கான உரிமையை புரட்சி கொண்டிருக்கிறது என்றால்கலையின் எந்த போக்கிலும்வடிவத்தில் அதன் சாதனை எத்துணை உயர்ந்திருந்தாலும் பொருட்படுத்தாமல்அதன் கரங்களை ஊடுருவத் தயங்காது. இது புரட்சிகர சூழலைச் சிதைக்கும் அல்லது புரட்சியின் உட்சக்திகளைஅதாவது பாட்டாளிகள்விவசாயிகள் மற்றும் அறிவுஜீவிகளை ஒன்றுக்கொன்றை விரோதமாக எழுப்பிவிடுவதற்கான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. எமது நிலைப்பாடானதுதெளிவாகஅரசியல்ரீதியானதுதவிர்க்க முடியாததுபொறுத்துக்கொண்டிருக்காதது. ஆனால் இந்தக் காரணத்திற்காகவேஅது தன் செயற்பாட்டின் வரம்புகளைத் தெளிவாக வரையறுக்க வேண்டியுள்ளது. என்னுடைய கருத்தை மிகத் துல்லியமாக வெளியிடுவதானால்நான் இவ்வாறு கூறுவேன்: நாம் கவனிப்பிற்குட்பட்ட ஒரு புரட்சிகர கட்டுப்பாட்டுமுறையைமற்றும் அற்பத்தனமான கட்சி மோசடிகளிலிருந்து சுதந்திரமானகலைத்துறையில் ஒரு பரந்தவளைந்துகொடுக்கும் கொள்கையை கொண்டிருக்க வேண்டும்... .

தனிநபர்வாதம் (individualism) பழைய இலக்கியம் வடிவத்தில் பழமைவாத சின்னமாக இருக்கிறது என்பதற்காக மட்டுமில்லாமல்மாறாக அது பாட்டாளிகளின் ஒட்டுமொத்த இயல்பிற்கும் முரண்படுகிறது என்பதற்காகஎதிர்காலவாதிகள் (futurist) அதை ஒதுக்கி தூக்கியெறிய விரும்பும்போதுஅவர்கள் தனிநபர்வாதத்திற்கும் கூட்டியியல்புவாதத்திற்கும் (collectivism) இடையிலிருக்கும் முரண்பாடுகளின் இயங்கியல் இயல்பை போதியளவிற்கு புரிந்துகொண்டிராத ஒரு புரிதலை வெளிப்படுத்துகிறார்கள். இதில் அருவமான உண்மைகள் என்று ஏதுமில்லை. தனிநபர்வாதம் பல்வேறு வகைகளில் இருக்கின்றன. அதிகளவிலான தனிநபர்வாதம் இருப்பதாலேயேபுரட்சிக்கு முந்தைய அறிவுஜீவிகளின் ஒரு பிரிவு தன்னைத்தானே புதிர்வாதத்திற்குள் (mysticism) தள்ளிக் கொண்டதுஆனால் மற்றொரு பிரிவு-அவர்களைக் கௌரவிக்கும் முறையில் கூறுவதானால்-பாட்டாளிகளுக்கு அருகில் வந்த புரட்சியால் ஈர்க்கப்பட்ட மற்றொரு பிரிவு எதிர்காலவாதத்தின் குழப்பங்களோடு கைகோர்த்து நகர்ந்தது. ஆனால் தனிநபர்வாதத்தால் அவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டிருந்ததால்பாட்டாளிகளிடம் மதிப்பைக் கொண்டு அவர்கள் அருகில் வந்தபோதுதன்முனைப்புவாதத்தின் கொடுமைகளை அவர்கள் காட்டினார்கள்அதாவது அதீத தனிநபர்வாதத்தை காட்டினார்கள். பிரச்சினை என்னவென்றால்சராசரி பாட்டாளி இந்த தரத்தில் பின்தங்கியிருந்தார். பெருந்திரளான கூட்டத்தில்பாட்டாளியின் தனித்துவம் போதியளவிற்கு உருவாக்கப்படவும் இல்லைவேறுபடுத்திக் காட்டப்படவும் இல்லை.

புறநிலை தரத்தை உயர்த்துவதும்தனிநபரின் அகநிலை நனவை உயர்த்துவதுமேஇன்று நாம் நின்றிருக்கும் விளிம்பிலிருந்து கலாச்சாரத்தை முன்னேற்றுவதில் செய்யக்கூடிய மிக மதிப்புடைய பங்களிப்பாக இருக்கிறது. பூர்ஷ்வா இலக்கிய படைப்புகள் வர்க்க ஐக்கியத்தில் பிளவை ஏற்படுத்தும் என்று சிந்திப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஷேக்ஸ்பியர்கோத்தேபுஷ்கின் அல்லது டாஸ்டோயேவ்ஸ்கியிடமிருந்து ஒரு தொழிலாளர் எதை எடுத்துக் கொள்ளக்கூடியதுமனிதகுல சிறப்பியல்புஅதன் உணர்வுகளின் வடிவங்கள்மனிதனின் உளச் சக்திகள் பற்றிய ஆழ்ந்ததீவிர அறிந்து கொள்ளுதல்ஆழ்மனத்தின் பங்கு போன்றவைதான். இறுதிப் பகுப்பாய்வில் தொழிலாளி செழிப்புத்தான் அடைவார்.

ஆரம்பத்தில்கோர்க்கி தனிநபர்வாத காதலுடன் பொறுப்பற்றதன்மைக்கு ஆட்பட்டிருந்தார். இருந்த போதினும், 1905க்கு சற்று முந்தைய காலப்பகுதியில்பாட்டாளிகளின் மிதமான ஆரம்பகால புரட்சிகரவாதத்தை பரப்பினார். ஏனென்றால்அந்த வர்க்கத்திடையே தனித்துவத்தை தூண்டிவிட அவர் உதவினார்அதில் தனித்துவம் ஒருமுறை தூண்டிவிடப்பட்டுவிட்டால்தூண்டிவிடப்பட்ட ஏனைய தனித்துவங்களுடன் தொடர்பு கொள்ள அது விழையும். பாட்டாளி வர்க்கத்திற்கு கலை உணவும் (artistic food), கல்வியும் தேவைப்படுகிறதுஆனால் இதற்காக பாட்டாளி வர்க்கம் வெறும் களிமண்ணாக இருக்கிறதுஅதை இதற்கு முன்னால் இருந்த மற்றும் பின்னால் வரவிருக்கிற கலைஞர்கள் தான் தங்களின் சொந்த கற்பனையினாலும்தங்களின் சொந்த விருப்பத்தினாலும் மெருகேற்ற முடியும் என்பது அர்த்தமல்ல.
பாட்டாளி வர்க்கம் ஆன்மீகரீதியாக இருப்பதால்அது கலைத்துவத்திலும் மிகவும் நுன்நுணர்வாக இருக்கிறதுஅது அழகியல் உணர்வில் அறிவுபெறாமல் இருக்கிறது. பேரழிவிற்கு உடனடியான பிந்தைய காலத்தில் பூர்ஷூவா அறிவுஜீவிகள் விட்ட இடத்திலிருந்து அவர்களால் தொடங்க முடியும் என்று சிந்திப்பதே பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஒரு மனிதன் தொடக்கநிலையிலிருந்து அவனுடைய அபிவிருத்தியில் உடலளவிலும்மனத்தளவிலும் இனத்தின்ஓரளவிற்கு விரித்து சொல்வதனால்மொத்த விலங்கின உலகின் வரலாறையும் கடந்து செல்கிறான். ஆகவேஒரு குறிப்பிட்டளவிற்குவரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையிலிருந்து காலத்திலிருந்து வெகுசமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புதிய வர்க்கத்தின் மேலெழுந்துவரும் பெரும்பான்மைகலைத்துவ கலாச்சாரத்தின் மொத்த வரலாற்றின் வழியாக கடந்து செல்கிறது. இந்த வர்க்கம் பழைய கலாச்சாரங்களின் உட்கூறுகளை உள்வாங்காமலும்ஏற்றுக்கொள்ளாமலும் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கத் தொடங்க முடியாது. ஆனால் அது குறைந்தபட்சம் கலையின் ஒட்டுமொத்த பழைய வரலாற்றையும் படிப்படியாகமெதுவாகமுறையாக கடந்து செல்ல வேண்டியது அவசியம் என்பது இதன் அர்த்தமல்ல. ஒரு உயிரியியல் ரீதியான தனிநபர் என்ற வகையில் அல்லாமல்ஒரு சமூக வர்க்கம் என்கிற வகையில்உள்வாங்கும் மற்றும் மாற்றம்பெறும் நிகழ்ச்சிப்போக்கானது ஒரு தடையற்றமிகவும் நனவுபூர்வமான பாத்திரத்தை கொண்டுள்ளது. ஆனால் கடந்த காலத்தின் முக்கிய சுவடுகளை மதிக்காமல் ஒரு புதிய வர்க்கம் முன்னேறி சென்றுவிட முடியாது.

புரட்சிகர கலையும்சோசலிச கலையும்

இதுவரை புரட்சிகரக் கலை என்று ஏதும் இல்லை. இக்கலையின் கூறுபாடுகள் சில உள்ளனஅதைப்பற்றிய குறிப்புக்களும்முயற்சிகளும் உள்ளனமேலும் மிக முக்கியமானது என்னவெனில்புரட்சிகர மனிதன் இருக்கிறான். அவன் ஒரு புதிய தலைமுறையைத் தன் கற்பனைக்கேற்றபடி அமைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இந்த கலையின் தேவை மிகமிக அதிகமாக உள்ளது. அத்தகைய கலை தன்னைத் தெளிவாக வெளிப்படுத்திக் கொள்ள எத்தனை காலமாகும்இதைக் கணிப்பதும் கூட கடினம்ஏனென்றால்நிகழ்ச்சிப்போக்கு அளவிடற்கரியதாககணிப்பிடமுடியாததாக உள்ளதுஅதிகளவில் அளவிடக்கூடிய சமூக நிகழ்ச்சிப்போக்குகளை கணிப்பிட முயலும் போது கூடநம்முடைய கணிப்புவேலையில் நாம் வரம்புகளைக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த கலையானதுபுரட்சியின் போது பிறந்தஅதை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் இளம் தலைமுறையின் கலை வெளிப்பாடாககுறைந்தபட்சம் அதன் முதல் பெரிய அலையாக கூட ஏன் ஆகவில்லை?

ஒரு புரட்சிகர சமுதாய அமைப்புமுறையின் அனைத்து முரண்பாடுகளையும் தவிர்க்க முடியாமல் பிரதிபலிக்கும் புரட்சிகரக் கலையானதுஇதுவரை அடித்தளம் அமைக்கப்பட்டிராத சோசலிசக் கலையுடன் குழப்பப்பட்டு விடக்கூடாது. மற்றொருபுறம்இந்த இடைமருவு காலத்திய கலையினூடாகவே சோசலிசக் கலையும் வளரும் என்பதையும் ஒருவர் மறந்துவிடக்கூடாது.

இதுபோன்றதொரு வேறுபாட்டை வலியுறுத்துகையில்ஏதோவொரு அருவமான வேலைத்திட்டத்தின் பள்ளியாசிரியர்முறை கண்ணோட்டத்தை நாம் பின்பற்றி கொண்டிருக்கவில்லை. சோசலிசப் புரட்சியென்பது தேவையின் அரசிலிருந்து சுதந்திர அரசிற்கான ஒரு பாய்ச்சல் என்று ஏங்கெல்ஸ் வெற்றுத்தனமாகக் கூறவில்லை. புரட்சியானது இன்னமும் சுதந்திர அரசாகிவிடவில்லை. ஆனால் அதனோடு ஒப்பிடுகையில்அது தேவையின்” கூறுபாடுகளைப் பெருமளவிற்கு வளர்த்துக் கொண்டுள்ளது. சோசலிசம் வர்க்க முரண்பாடுகளை அழிக்கும்அத்துடன் வர்க்கங்களையும் அழிக்கும்ஆனால் புரட்சியானது வர்க்கப் போராட்டத்தை அதன் மிக உயர்ந்த பதட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

புரட்சிக் காலக்கட்டத்தில்சுரண்டுபவர்களுக்கு எதிராக தங்களின் போராட்டத்தில் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க உதவும் இலக்கியம் தான் தேவைப்படுகிறதுஅதுதான் முற்போக்கானது. பாட்டாளி வர்க்க சர்வாதிகார சகாப்தத்தில் ஓர் ஆக்கப்பூர்வமான வரலாற்று காரணியாக விளங்கும் புரட்சிகர இலக்கியமானது சமுதாய வெறுப்புணர்வை நிரப்பாதுமாறாக அதிலேயே நிறைந்திருக்கும். சோசலிசத்தின்கீழ்ஐக்கியம் தான் சமுதாயத்தின் அடிப்படைத்தளமாக இருக்கும். இலக்கியமும்கலையும் ஒரு வித்தியாசமான வகையில் ஒலிக்கப்படும். தற்போது புரட்சியாளர்களாகிய நாம் பெயரிடக் கவலைப்படும் எதிர்பார்ப்பில்லாத நட்புஅண்டை வீட்டாரை நேசித்தல்பரிவுணர்வு போன்ற அனைத்து உணர்வுகளும் (இவை வேஷதாரிகளாலும்வஞ்சகர்களாலும் அதிகளவில் போர்த்தப்பட்டிருக்கின்றன) சோசலிசக் கவிதையின் வலிமையான முழக்கங்களாக இருக்கும்.

எவ்வாறிருப்பினும்நீட்ஷேயவாதிகள் (Nietzscheans) பயப்படுவதுபோல்அதிகளவிலான ஐக்கியம் மனிதனைச் சீரழித்து ஓர் உணர்வுபூர்வசெயலாக்கமற்றமந்தை விலங்குகளைப் போலாக்கிவிடுமாஎன்றால் நிச்சயம் அவ்வாறு ஆகாது. முதலாளித்துவ சமுதாயத்தில்சந்தைப் போட்டியின் தன்மையை கொண்டிருக்கின்ற போட்டித்தன்மையின் சக்திவாய்ந்த ஆற்றல்ஒரு சோசலிச சமுதாயத்தில் மறைந்துவிடாதுமாறாகஉளப்பகுப்பாய்வாளர்களின் வார்த்தைகளில் கூறுவதானால்அது மேன்மைப்படுத்தப்படும். அதாவது அதுவொரு உயர்ந்தகூடுதலான ஆழ்ந்த வடிவத்தை எடுக்கும். ஒருவருடைய கருத்தைக் குறித்தோஒருவருடைய திட்டத்தைக் குறித்தோஒருவருடைய ஆர்வத்தைக் குறித்தோ அதிலே போட்டி இருக்கலாம். அரசியல் போராட்டங்களின் அளவுகள் இல்லாதுபோகையில் (வர்க்கங்களிலில்லாத ஒரு சமுதாயத்தில்அத்தகைய போராட்டங்கள் இருக்காது) சுதந்திரமடைந்த உணர்ச்சிகள்தொழில்நுட்பம்கலை உட்பட ஆக்கபூர்வமானவற்றிற்குள் திசை திருப்பப்படும். அதன் பின்னர் கலை இன்னும் பொதுநோக்கம் கொள்ளும்முதிர்ச்சியடையும்பக்குவமடையும்மேலும் ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கையை முற்போக்காக கட்டமைப்பதில் அது மிகச்சிறந்த வழிமுறையாக மாறும். வேறு எதனுடனும் தொடர்பற்றவெறும் அற்பத்தனமாக” அது இருக்காது.

நிலத்தைச் சாகுபடி செய்தல்மனிதர்களின் வசிப்பிடத்தைத் திட்டமிடுதல்அரங்குகள் அமைத்தல்குழந்தைகளுக்கு சமுதாயம் சார்ந்து கற்பிப்பதற்கான முறைகள்விஞ்ஞானப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்புதிய வடிவங்களை தோற்றுவித்தல் போன்ற வாழ்வின் அனைத்து வடிவங்களும் அனைவரையும்ஒவ்வொருவரையும் உயிர்ப்புடன் ஈர்க்கும். ஒரு புதிய பிரமாண்டமான கால்வாய்கள் பற்றிய பிரச்சினைக்காகஅல்லது சகாராவில் சோலைகளை நிறுவுவதற்காக (இதுபோன்றவொரு பிரச்சினையும் எதிர்கொள்ளப்படும்)வானிலை மற்றும் சுற்றுச்சூழலைக் கட்டுப்படுத்துவதன்மீதுஒரு புதிய அரங்கத்தின்மீதுவேதியல் புனைவுகோள்களின் மீதுபோட்டியிடும் இரண்டு இசைப் போக்குகளின் மீதுவிளையாட்டுக்களின் ஒரு சிறந்த முறையின்மீது மக்கள் குழுக்களாக” பிரிவார்கள். ஆனால் இத்தகைய குழுக்கள் வர்க்க அல்லது ஜாதி பேராசைகளால் நச்சுப்பட்டிருக்காது. ஒட்டுமொத்த வெற்றிக்காக அனைவரும் சமமான ஆர்வம் காட்டுவார்கள். போராட்டமானதுமுற்றிலும் ஒரு சித்தாந்த தன்மையைக் கொண்டிருக்கும். அது இலாபத்திற்கு பின்னால் ஓடாதுஅது எந்த கருவியையும் கொண்டிருக்காதுகாட்டிக்கொடுப்புகள் இல்லைஇலஞ்சம் இல்லைவர்க்கங்களாக பிளவுற்ற சமுதாயத்தில் போட்டி” உணர்வை ஏற்படுத்தும் எதுவும் இருக்காது. ஆனால் இது எவ்வகையிலும் முழு ஈடுபாட்டைவியத்தகு முன்னேற்றத்தைதீவிர ஆர்வத்தை இல்லாமல் செய்துவிடாது.

ஒரு சோசலிச சமுதாயத்தில் அனைத்துப் பிரச்சினைகளும்-முன்னர் தன்னியல்பாகவும்தானாகவும் தீர்க்கப்பட்ட வாழ்வின் பிரச்சினைகளும்தனிச்சலுகைப்பெற்ற தெய்வீக ஜாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கலையின் பிரச்சினைகளும்- அனைத்து மக்களுக்கும் சொந்தமாக இருக்கும்கூட்டு நலன்களும் மற்றும் ஆர்வங்களும்தனிநபர் போட்டிகளும் மிகப் பரந்த வரவேற்பையும்எல்லையில்லா வாய்ப்புக்களையும் பெறும் என்று ஒருவர் உறுதியாகக் கூறலாம். ஆகவேகலை என்பது புதிய கலைத்துவ போக்குகளின் உருவாக்கத்திற்கும்அவற்றின் வடிவங்களை மாற்றுவதற்கும் தேவையான எந்தவிதமான கூட்டு தூண்டுதல்களோமுறுக்கேறிய சக்தியோஉளவியல்ரீதியான கூட்டு எழுச்சிகளோ இல்லாமல் பாதிக்கப்பட்டுவிடாது. அது அழகியல் உணர்வின் பள்ளியாக இருக்கும்இதைச்சுற்றி குழுக்கள்” அணித்திரளும்அதாவது பண்புநலன்களின்ஆர்வங்களின் மற்றும் உணர்வுகளின் சங்கமங்களாக அவை இருக்கும். படிப்படியாக உயர்ந்து வரும் அடித்தளங்களைக் கொண்டிருக்கும் ஒரு கலாச்சாரத்தில் நிகழும் மிகவும் அதிருப்தியும்அழுத்தமும் நிறைந்த ஒரு போராட்டத்தில்மனித ஆளுமையானதுதொடர்ச்சியான அதிருப்தியிலும் அதன் ஒப்பில்லா அடிப்படை சிறப்புடன்வளரும்அதன் அனைத்து பகுதிகளிலும் மெருகேற்றப்படும். உண்மையில்ஒரு சோசலிச சமுதாயத்தில் தனித்துவம் வீழ்ந்துவிடும் என்றோ அல்லது கலை அதன் சிறப்பை இழந்துவிடும் என்றோ அஞ்சுவதற்கு எந்த காரணமும் இல்லை... .




லியோ டால்ஸ்டாய் மறைந்த நூறாண்டுகளுக்குப் பின் : லியோன் ட்ரொட்ஸ்கியின் புகழஞ்சலி (Trotsky’s 1908 Tribute to Leo Tolstoy)

லியோன் ட்ரொட்ஸ்கி


நூற்றாண்டுகளுக்கு முன்பு பெரும் ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் நவம்பர் 20, 1910 ல் மறைந்தார்பல எழுத்தாளர்களால் பெரும் பாராட்டுக்களை பெற்றிருந்த போதிலும்டால்ஸ்டாய்க்கு மிகச் சிறந்த பாராட்டு அவர் மறைவிற்கு இரு ஆண்டுகளுக்கு முன்புலியோன் ட்ரொட்ஸ்கி டால்ஸ்டாயின் 80 வது பிறந்த தினத்தன்று எழுதிய இக்கட்டுரை மூலம் வந்ததுஇது முதலில் ஜேர்மனியில்  Die Neue Zeitல் செப்டம்பர் 18, 1908ல் வெளியிடப்பட்டதுஅதன் பின் 1926ம் ஆண்டு ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள், 20ம் தொகுப்பு ரஷ்ய மொழிபெயர்ப்பில் வந்தது ;  இறுதியாக நான்காம் அகிலத்தின் இதழ் ஒன்றில் மேஜூன் 1951ல் “டால்ஸ்டாய்கவிஞரும்,எதிர்ப்பாளரும் என்ற தலைப்பில் ஜோன் ஜிரைட்டின் மொழிபெயர்ப்பு வந்ததுமூல ஆங்கில மொழிபெயர்ப்பில் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளனபல இறுதிக் குறிப்புக்கள் 1926 ரஷ்ய பதிப்பிற்கேற்ப சேர்க்கப்பட்டுள்ளன.
இல்யா ரெபின் வரைந்த டால்ஸ்டாய் ஓவியம்


டால்ஸ்டாய் இன்று தனது எண்பதாவது பிறந்த நாளைக் கடந்துஇப்பொழுது நம் முன் ஒரு மகத்தான  செதுக்கப்பட்ட குன்றின் உச்சியில் மலைப்பாசி படர்ந்துவேறுபட்ட வரலாற்று உலகில் இருந்து வந்துள்ளவராக நிற்கிறார்.

இது மிக வியப்பான பொருளாகும்கார்ல் மார்க்ஸ் மட்டுமல்ல –டால்ஸ்டாய்க்கு நெருக்கமான துறையில் உள்ள பெயரை மேற்கோளிடும்போதுஹெயின்ரிக் ஹெயினும் நம் சமகாலத்தவர் போல் தோன்றுகின்றார்ஆனால் நம் பெரும் சமகாலத்தவரான  யாஸ்நயா போலியானவிற்கோ நாம் ஏற்கனவே அனைத்திலும் வேறுபாடுகளை மீண்டும் மாற்றப்பட முடியாத வகையில் ஏற்படுத்தி விடும் காலத்தினால் பிரிக்கப்பட்டுவிட்டோம்.

ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை அகற்றப்பட்டபோது இவருக்கு 33 வயது. “பத்து தலைமுறைகளாக உடலுழைப்பில் ஈடுபடாத தலைமுறைகளில்” தோன்றியவர் என்ற முறையில் அவர் பழைய பிரபுத்துவம்பூர்விகச் சொத்துக்கள்பரந்த பண்ணை வீடுஅமைதியாகவும்,பெருங்குடித் தன்மை நிறைந்தும் உள்ள லிண்டன் மர நிழலின் கீழ் உருவாக்கப்பட்ட சூழ்நிலை இவற்றிடையே வளர்ந்துகனிந்து நின்றார்.

நிலக்கிழார் ஆட்சியின் மரபுகள்அதன் வசீகரத்தன்மைஅதன் கவிதைஅதன் முழு வாழ்க்கை ஒயில் ஆகியவை டால்ஸ்டாயினால் தவிர்க்க முடியாமல் உள்வாங்கப்பட்டன. அவை அவருடைய ஆன்மிகத் தன்மையில் இயல்பான பகுதியாக இருந்தனஅவருடைய முழு உணர்வு ஆண்டுகளின் முதல் பகுதியில்இன்றும் அவர் இருப்பது போல்அவர் ஒரு உயர் பண்பாளர்ஆவார் –அவருடைய படைப்பாற்றலில் மிக ஆழ்ந்தஇரகசிய இடைவெளிகளில்இது அவருடைய பிந்தைய ஆன்மிக நெருக்கடிகள் அனைத்தையும் மீறி இருந்தது.

டால்ஸ்டாய் குடும்பம் மரபுடையமையாகப் பெற்றிருந்த பிரின்ஸஸ் வோல்கோன்ஸ்கி என்னும் பூர்விக இல்லத்தில், (War and Peace) போரும்அமைதியும் எழுதிய டால்ஸ்டாய் ஒரு எளிமையானஆடம்பரமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள அறை ஒன்றில் அமர்ந்துள்ளார். அறையில் ஒரு சிறிய ரம்பம் சுவரில் தொங்குகிறதுஒரு அரிவாள் காணப்படுகிறதுமேலும் ஒரு கோடாரியும் தென்படுகிறதுஆனால் இதே பகுதிக்கு மேல் மாடியில்சுவரில் ஏராளமான நலைமுறைகளின் புகழ்பெற்ற முன்னோர்களின்மரபுகளுடைய முழுப்பாதுகாவலர்கள் என்ற முறையில்இறுக்கமான முகத்தோடு பல ஓவியங்கள் சுவர்களில் மாட்டப்பட்டுள்ளனஇவற்றில் ஒரு அடையாளம் உண்டுஇந்த இரு தளங்களையுமே நாம் வீட்டின் எஜமானரின் இதயத்திலும் காண்கிறோம்— ஆனால் அவை தலைகீழாக நிலைபெற்றுள்ளனமுழு உணர்வின் உயர் சிகரங்களின் எளிய வாழ்க்கைமக்களிடையே ஆழ்ந்து அமிழ்ந்திருத்தல் என்ற தத்துவம் ஒரு கூடு போல் பின்னப்பட்டிருந்தது என்றால்உணர்வுகள்தீவிர ஆர்வங்கள்விருப்பங்கள் அனைத்தும் வெளிப்படும் கீழ்ப்பகுதியில் இருந்து ஒரு நீண்ட மூதாதையர் கூட்டம் உற்று நோக்குகிறது.

செயற்கையாக வளர்க்கப்பட்ட விருப்பங்களைப் பெருமைப்படுத்திதங்கள் சாதி முன்கருத்துக்களைபோலி அழகைப் பற்றிய மேற்புகழ்ச்சியில் மூடிமறைக்கும் ஆளும் வர்க்கங்களின் தவறானவெற்று உலகச் சார்புத் தன்மையை,  டால்ஸ்டாய் தன் பின்னிரக்கச் சீற்றத்தால்  துறந்தார்ஆனால் என்ன நடந்ததுஅவருடைய கடைசி முக்கிய நூலான புத்துயிர்ப்பில்(Resurrection) டால்ஸ்டாய் தன்னுடைய கலைப்படைப்புக் கவனத்தின் மையப் பகுதியில் இன்னும் அதே செல்வந்தர்கள்வசதியான குடும்பங்களில் பிறந்த ரஷ்ய நிலக்கிழாரைப் படைத்துஅவரைச் சுற்றி பெரும் அக்கறையுடன் பிரபுத்துவ உறவுகள்பழக்க வழக்கங்கள் மற்றும் நினைவுகளைத்தான் இருத்துகிறார் – ஏதோ இந்த “வெற்று உலகத் தன்மை”, “போலித்தனஉலகிற்கு வெளியே முக்கியத்துவம் நிறைந்தவையோ அல்லது அழகு நிறைந்தவையோ இல்லை என்பது போல்.

நிலக்கிழாரின் பண்ணை வீட்டில் இருந்து ஒரு சிறுகுறுகிய பாதை நேரே விவசாயியின் குடிசைக்குச் செல்கிறதுஅறநெறியாளரான டால்ஸ்டாய் அதை விமோசனப் பாதையாக மாற்றுவதற்கு முன்பு கவிஞரான டால்ஸ்டாய் இப்பாதையை பலமுறையும் நேசத்துடன் கடந்துள்ளார்.  நிலப் பண்ணை அடிமைமுறை அகற்றப்பட்ட பின்னரும் கூடஅவர் விவசாயியை “தன்னுடையவரே” என்று தன்னுடைய பொருள்சார் மற்றும் ஆன்மிக வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகத்தான் கருதினார்டால்ஸ்டாயின் சந்தேகத்திற்கிடமில்லாதஅவரே தன்னைப்பற்றி நம்மிடம் கூறியிருப்பதில் உள்ள “உண்மையான உழைக்கும் மக்கள்பால் இருந்தஉடல்ரீதியான நேசத்திற்குப்” பின்புறத்தில் இருந்து அதே போல் சந்தேகத்திற்கு இடமின்றி அவருடைய கூட்டுப் பிரபுத்துவ முன்னோரும் நம்மை இழிவுடன் நோக்குகிறார்இம்முறை அது ஒரு கலைஞரின் மேதையினால் ஒளியூட்டப்படுகிறது.

நிலக்கிழாரும் முழிக்கும் (muzhik) -இவர்களைத்தான் இறுதிப்பகுப்பாய்வில் தன்னுடைய படைப்பாற்றல் என்னும் உயர் புகலிடத்தில் டால்ஸ்டாய் முழுமையாக ஏற்றார்ஆனால் அவருடைய ஆன்மிக நெருக்கடிக்கு முன்போபின்போஅவர் எப்பொழுதும் நிலக்கிழாருக்கும் விவசாயிக்கும் இடையே இருந்த நபர்கள் பற்றிய முற்றிலும் பிரபுத்துவ இழிவில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லைவிடுவித்துக் கொள்ள முயலவும் இல்லை. அல்லது இந்தப் புனித பழமையான ஒழுங்கின் இரு முனைகளில் இருப்பவர்களுக்கு அப்பாலும் எவரையும் பொருட்படுத்தவில்லை —ஜேர்மனியக் கண்காணிப்பாளர்வணிகர்பிரெஞ்சு தனி ஆசிரியர்மருத்துவர்,“அறிவார்ந்தவர்” மற்றும் இறுதியாக தன்னுடைய பாதுகாப்பையும் சங்கிலியையும் கொண்டிருந்த ஆலைத் தொழிலாளி எனஇந்த வகைப் பிரிவினரை அறிந்து கொள்ள வேண்டியஅவர்கள் ஆன்மாவை ஊடுருவிப் பார்க்க அல்லது அவர்கள் நம்பிக்கை பற்றி வினா எழுப்ப வேண்டிய தேவையையும் டால்ஸ்டாய் ஒருபொழுதும் கொண்டதில்லைஅவருடைய கலைஞர் பார்வையில் அவர்கள் பல முக்கியமற்றபெரும்பாலும் நகைச்சுவை பக்கவாட்டுத் தோற்றத்தில்தான் கடக்கப்படுகின்றனர்எழுபதுகள் அல்லது எண்பதுகளின் புரட்சியாளர்களின் தோற்றங்களை அவர் படைக்கும்போதுஉதாரணத்திற்கு புத்துயிர்ப்பில்அவர் தன்னுடைய பழைய நிலக்கிழார் விவசாயி மாதிரியைத்தான் ஒரு புதிய தொகுப்பில் கொடுக்கிறார் அல்லது முற்றிலும் வெளித்தன்மை கொண்டநகைச் சுவையான படைப்பைத்தான் அளிக்கிறார்.

அறுபதுகளின் தொடக்கத்தில் புதிய ஐரோப்பியக் கருத்துக்கள்இன்னும் முக்கியமான விதத்தில் புதிய சமூக உறவுகள்  ரஷ்யா முழுவதும் வெள்ளமெனப் புகுந்தபோதுநான் கூறியபடிடால்ஸ்டாய் ஏற்கனவே தனக்குப் பின் ஒரு நூற்றாண்டின் மூன்றில் ஒரு பகுதியைக் கடந்துவிட்டார்:உளரீதியாக அவர் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டிருந்தார்.

இங்கு அவருடைய நெருங்கிய நண்பரும்நிலக்கிழாரும்சூட்சுமமான உணர்ச்சிப் பாடல் கவிஞருமான பெட் (ஷென்ஷின்போல் பண்ணை அடிமை முறைக்கு டால்ஸ்டாய் வக்காலத்து வாங்குபவராக மாறவில்லை என்பது நினைவில் இருக்க வேண்டும் என்பதைக் கூறத் தேவையில்லை. முந்தையவருடைய இதயத்தில் இயற்கையை இளகிய மனத்துடன் ஏற்று நேசிக்கும் தன்மை பண்ணைமுறையில் கட்டாயச் சவுக்கடிக்கு முன் பாராட்டுதலுடன் தாழ்ந்து நிற்கும் குணமும் இணைந்திருந்தனஆனால் டால்ஸ்டாயிடம் இயைந்திருந்ததோ பழைய முறைக்குப் பதிலாக வந்திருந்த புதிய சமூக உறவுகளின் பால் ஏற்பட்ட ஆழ்ந்த வெறுப்பு ஆகும். “தனிப்பட்ட முறையில் அறநெறிகளில் எந்த முன்னேற்றத்தையும் நான் காணவில்லை.பிறர் அது பற்றிக் கூறுவதையும் ஏற்கத் தயாராக இல்லைஉதாரணமாக ஆலை உரிமையாளருக்கும் தொழிலாளருக்கும் இடையே உள்ள உறவு நிலக்கிழார் பண்ணை அடிமை இருவருக்கும் இடையே இருந்த மனிதாபிமானத்தைவிட அதிகம் இல்லை என்றுதான் நான் காண்கிறேன்.”என்று அவர் 1861ல் எழுதினார்.

எல்லா இடங்களிலும்எல்லாவற்றிலும் பரபரப்பும் கொந்தளிப்பும் வந்தனபழைய பிரபுத்துவத்தின் சிதைவு ஏற்பட்டதுவிவசாயிகள் தொகுப்பின் சிதைவுஅனைத்திலும் பெருங்குழப்பம் ஆகியவை வந்தனவெறும் குப்பையும்அகற்றப்படுவதின் கூளங்களும் நிறைந்தனநகர வாழ்வில் ஆரவாரங்கள் ஒலித்தனமதுக்கூடங்களும்சிகரெட்டும் கிராமங்களில் நுழைந்தனநாட்டுப்புறப் பாடல்களுக்குப் பதிலாக ஆலைப்பாடல்கள் ஒலித்தனஇவை அனைத்துமே டால்ஸ்டாயை ஒரு உயர்குடியாளர்மற்றும் கலைஞர் என்ற முறையில் வெறுப்புக் கொள்ளச் செய்தன.

இப்பெரும் வழிவகையில் இருந்து அவர் உளரீதியாக மாறுபட்டார்அதற்கு கலையளவு அங்கீகாரம் கொடுக்கவும் எப்பொழுதும் மறுத்தார்பண்ணை அடிமை முறையைக் காக்கும் உள் உந்துதலை அவர் உணர்ந்ததில்லை,ஆனால் முழுமனத்துடன் அறிவார்ந்த எளிமை உள்ளது என்று அவர் உணர்ந்த இடத்தில் முழுமையான உறுதிப்பாட்டைக் கொண்டார்இவர் அதை கலைவடிவில் முழுமையாக வெளிப்படுத்த முடிந்தது.

அங்கு வாழ்வு ஒரு தலைமுறைதலைமுறையாகவும் நூற்றாண்டில் இருந்து நூற்றாண்டிற்கும் அதே மாறாத் தன்மையுடன் கழிக்கப்படுகிறதுஅங்கு புனிதமான தேவை என்பதுதான் மற்றவற்றை ஆள்கிறதுஒவ்வொரு நடவடிக்கையும் சூரியன்மழைகாற்றுவளரும் பசுமைப் புற்கள் ஆகியவற்றை ஒட்டித்தான் உள்ளதுஇங்கு எதுவும் ஒருவருடைய தனிப்பாட்ட காரணத்திற்கோதனிநபரின் எழுச்சி மிகுத்த விருப்பச் செயலினாலோ வெளிப்படுவதில்லைஎனவே எந்தத் தனிப் பொறுப்பும் கிடையாதுஅனைத்தும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதுவேமுன்கூட்டியே நியாப்படத்தப்பட்டதுபுனிதப்படுத்தப்பட்டதுஎதற்கும் பொறுப்பற்ற முறையில்தன்னைப் பற்றியும் சிந்தியாத அளவில்மனிதன்  கேட்டுக்கீழ்ப்படிந்துதான் வாழ்கிறான் என்று “Dominion of the Land”  கவிதையை எழுதிய உஸ்பென்கி கூறுகிறார்இப்படி எப்பொழுதும் கேட்டுக் கீழ்ப்படிதல் என்பது எப்பொழுதும் கடும் உழைப்பாக மாறுகிறதுஅதுதான் வாழ்வைத் துல்லியமாக உருவாக்குகிறதுவெளிப்படையாக எந்த விளைவுகளையும் கொடுப்பதில்லைஆனால் அதன் இயல்பிலேயே விளைவுகளை அடக்கியுள்ளது…. என்ன அற்புதம்இந்தக் கடின நம்பியிருக்கும் நிலைகூடசிந்தனையோவிருப்பமோ இல்லாமல்பிழைகளோநினைத்து வருந்ததலோ இல்லாமல் இருப்பதுதான்—“ரைப் பயிரைப் பாதுகாக்கும் கடுமையான வாழ்க்கைக்குப் பெரும் அறவகையிலான “எளிய தன்மையைக் கொடுக்கிறதுநாடோடிப்பாடல் பேரிலக்கியத்தின் விவசாயி-கதாநாயகன் மிகுலா செல்யனினோவிச்தன்னைப் பற்றிக் கூறுகிறார்: “நான் இயல்பான நிலத்தின் மிகப் பிரியமானவன்.”

ரஷ்ய வெகுஜனத் திருப்திப் படுத்துதலின் சமயப் புராண நம்பிக்கையின் தன்மைபல தசாப்தங்களாக ரஷ்ய அறிவார்ந்தவர்களின் மனத்தில் ஆட்சி செலுத்துவது இவ்விதத்தில்தான் உள்ளதுஅதன் முற்போக்குத்தனப் போக்குகளுக்கு முற்றிலும் செவிமடுக்காமல்டால்ஸ்டாய் எப்பொழுதும் தனியே நின்று வெகுஜனத்திருப்தி இயக்கத்தில் கூட அதன் உயர்பண்பு கன்சர்வேடிவ் பிரிவைத்தான் பிரதிபலித்தார்.

டால்ஸ்டாய் புதியவை பற்றி வெறுப்புணர்வு கொண்டிருந்தார்தான் அறிந்த,உணர்ந்தநேசித்த செயற்கையான ஒரு ரஷ்ய வாழ்வைத் தோற்றுவிப்பதற்காக அவர் கடந்த காலத்திற்குத் திரும்பும் கட்டாயத்திற்கு உட்பட்டார், 19ம் நூற்றாண்டுத் தொடக்கங்களுக்கே செல்ல நேர்ந்தது. 1867-69ல் எழுதப்பட்ட போரும் அமைதியும்  அவருடைய மிகச் சிறந்தவிஞ்சப்படாத படைப்பாகும்.

தன்னுடைய பாத்திரமான Karatayev ல் வாழ்க்கையில் தற்சார்பற்ற வெகுஜனத் தன்மை மற்றும் புனிதமான பொறுப்பற்ற தன்மை டால்ஸ்டாயால்  உருவாக்கப்பட்டதுபொதுவாக ஒரு ஐரோப்பியத் தலைவருக்கு இத்தகைய பாத்திரத்தைப் புரிந்து கொள்ளுவது கடினம்எவ்விதத்திலும் அத்தகைய குணநலன் அவரிடம் இருந்து மிகத் தொலைவில்தான் இருந்தது.

தானே கண்டபடி காரடயேவின் வாழ்வு ஒரு தனநபர் என்ற முறையில் பொருளற்று இருந்ததுஒரு பெரும் மொத்தத் தொகுப்பில் ஒரு சிறு பகுதி என்ற முறையில்தான் அது பொருளைக் கொண்டிருந்ததுதொடர்புகள்,நட்புகள்காதல் என்று Pierre உணர்ந்தவகையில்காரடயேவிடம் ஏதும் இல்லைஅவர் நேசித்தார்வாழ்க்கை அவருக்குத் தொடர்பு ஏற்படுத்திய அனைத்துடனும் நேசித்து வாழ்ந்தார்குறிப்பாக மனிதர்களுடன்….ஆனால் பீரேயோ தன்னிடத்தில் காட்டப்பட்ட பிரியமான நேசம் இருந்தபோதும்கூட காரடயேவ் தாங்கள் பிரிந்துவிட்டால் ஒருகணம் கூட வருத்தப்பட மாட்டார் என்றுதான் உணர்ந்தார்.

ஹெகல் கூறியது போல் அந்தக் கட்டத்தில்ஆவி இன்னும் உள் முழு உணர்வைப் பெறாத நிலையில்அதையொட்டி உள்ளே இருப்பதாக மட்டுமே வெளிப்பட்டிருக்கும் கணமாகும்அவ்வப்பொழுது தோன்றினாலும் காரடயேவ்போரும் அமைதியும் உடைய தத்துவார்த்த அச்சு ஆவார்இல்லாவிடின் கலைச் சார்பு அச்சு எனலாம்ஒரு தேசிய மாவீரராக டால்ஸ்டாய் மாற்றும் குடுஜோவ்இதே காரடயேவ்தான்ஒரு தலைமைத் தளபதி என்னும் பதவியில்தான்நெப்போலியனுக்கு முற்றிலும் எதிரிடையாக குடுஜோவிடம் தனிப்பட்ட திட்டங்கள் கிடையாதுதனிப்பட்ட விழைவுகள் ஏதும் கிடையாதுபகுதி உணர்வுடைய உத்திகளினால்அவர் பகுத்தறிவினால் வழிகாட்டப்படாமல்அதற்கும் உயர்ந்திருக்கும் தன்மையினால் வழிகாட்டப்படுகிறார்அதாவது சத நிலைகள் பற்றிய ஒரு மங்கிய உள்ளுணர்வு மற்றும் மக்களின் ஆர்வம் கொடுக்கும் தூண்டுதல் ஆகியவற்றால்தன்னுடைய தெளிவான கணங்களின் ஜார் அலெக்சாந்தர் மற்றும் குடுஜோவின் வீரர்களில் சிலர் என அனைவரும் நாட்டின் மேலாதிக்கத்தின்கீழ் சமமாக நிற்கின்றனர்…. இந்த அறவகை ஒற்றுமையில்தான் டால்ஸ்டாய் நூலின் அருட்பண்பு உள்ளது.

வரலாற்றினால் வாரிசுத் தன்மை அகற்றப்பட்டுவிட்ட பிரபுத்துவம்படிப்படி அதிகார நிலைகளைக் கொண்டிருக்கும் சமூக அமைப்புக்களின் நளினமான கடந்த காலம் ஏதும் இல்லாதசிலுவைப் போர்களில் ஈடுபடாததேர்ந்த குதிரைவீ ர ரின் காதலோஅத்தகுதிக்கான போட்டிகளோ இல்லாத,கவனத்தை ஈர்க்கும் நெடுஞ்சாலைக் கொள்ளைகளோ கூட இல்லாத இந்தப் பழைய ரஷ்யாதான் உண்மையில் எவ்வளவு  அவலமாக உள்ளதுஅக அழகைப் பொறுத்தவரையில் அது எத்துணை வறிய நிலையில் உள்ளது.பொதுவானகிட்டத்தட்ட விலங்கினங்கள் போல் வாழ்ந்து வரும் விவசாயிகள் தொகுப்பை இரக்கமற்ற முறையில் எத்தகைய கொள்ளை அடிக்கப்பட்டது !

ஆனால் மேதை உருவாக்கும் மறுபடைப்பின் அற்புதம்தான் என்னேஇந்தச் சுவையற்றஒளியற்ற வாழ்வில் இருந்து அவர் அதன் இரகசிய அழகைப் பற்றி எடுக்கிறார்ஹோமர் காட்டும் அமைதிஹோர் குழந்தைகள்மீது கொண்டிருந்த அன்பு இவற்றைப் போல்இவரும் அனைத்தின்மீதும்,அனைவரின்மீதும் தன் கவனத்தைச் செலுத்துகிறார்குடுஜோவ்,பண்ணைவிட்டுப் பணியாட்கள்குதிரைப்படைக் குதிரைவயதிற்கு வந்துவிட்ட சீமாட்டிமுஷிக்ஜார்ஒரு வீரரிடம் காணப்படும் வெற்றுத்தன்மைவயது முதிர்ந்த Freemason—இவர்களிடையே அவர் தனி விருப்பத்தை எவர்மீதும் காட்டில்லைஒவ்வொருவருக்கும் உரிய இடத்தைச் சிறிதும் மறுக்கவில்லைபடிப்படியாகஒவ்வொரு நிதானமான அடியாக,அவர் ஒரு வரம்பற்ற மகத்தான காட்சியைத் தோற்றுவிக்கிறார்அதன் பகுதிகள் அனைத்தும் ஒன்றாக ஒரு உட்பிணைப்பினால் சேர்ந்துள்ளன.தன்டனுடைய படைப்பில் டால்ஸ்டாய் வாழ்க்கையை ஓவியமாகத் தீட்டும்போது சிறிதும் அவசரப்படுவது இல்லைஇது ஒரு பயங்கரமான விஷயம்தான் கூறுவதற்குஆனால் அவர் தன்னுடைய மாபெரும் படைப்பை ஏழு முறைகள் திரும்பத் திரும்ப எழுதினார்இந்த மகத்தான படைப்பில் மிகப் பெரும் வியப்பைத் தருவது கலைஞர் தனக்கோ தன்னுடைய வாசகருக்கோ எந்தத் தனிப்பாத்திரத்துடன் ஒன்றாக மனத்தில் பிணைந்து நிற்பதற்கான வாய்ப்பும் கொடுக்கவில்லை

டால்ஸ்டாய் விரும்பாத Tugenev செய்வது போல் அவர் தன்னுடைய கதாநாயகர்களைக் மத்தாப்புவாணவெடிகளுக்கு இடையேமக்னீசியச் சுடர்களுக்கு நடுவே ஒரு காட்சிப் பொருளாக்குவதில்லைஅவர்களை மேன்மையாகக் காட்டுவதற்காக நிலைமைகளைத் தோற்றுவிப்பதில்லைஎதையும் மூடி மறைப்பதில்லை,எதையும் அடக்கி வைப்பதும் இல்லைபரபரப்புடன் உண்மையைத் தேடும்Pierre Bezukhov, நமக்கு இறுதியில் ஒரு நிறைவான குடும்ப மனிதராகவும் மகிழ்ச்சியான நிலக்கிழாராகவும் காட்டப்படுகிறார்தன்னுடைய பாதிக் குழுந்தையைப் போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளத்தைத் தொடும் நடாஷா ரோஸ்டோவாவை அவர் கடவுளின் இரக்கமற்ற தன்மையுடன் கைகளில் குழந்தையின் கழிவுகளை அகற்றுவதற்கு வைத்திருக்கும் துணிகளைக் கொண்டுள்ளஒரு வெற்றுத்தன குழந்தைபெறும் பெண்ணாக மாற்றுகிறார்ஆனால் பார்த்தால் கவனமற்ற தன்மையைக் கொண்டிருப்பது போன்ற இத் தனிப் பகுதிகளில் இருந்து ஒரு பெரும் முழுமையின் உயர்ந்த சாராம்ச நிலை வெளிப்படுகிறதுஅதற்குள்தான் அனைத்துமே உட்தேவை மற்றும் உள்ளிக்கத்தின் உணர்வைச் சுவாசிக்கின்றனஇந்தப் படைப்பாற்றல் முயற்சி ஒரு கலையுணர்வுப் பன்முகவிரிப்பில் ஆழ்ந்துள்ளதுஎன்று கூறுவது ஒருக்கால் பொருத்தமாக இருக்கும்இதில் அழகோஅழகின்மையோ இல்லைமகத்தானதுசிறியது என்று ஏதும் கிடையாதுஏனெனில் அது மகத்தானதுஅழகானது என்பதை வாழ்வின் முழுமையில்தான் கொண்டுள்ளதுவாழ்வின் எப்பொழுதும் நீடித்த வெளிப்பாடுகளின் சுழற்சியில்தான்இது ஒரு விவசாயக் கலை அழகு ஆகும்இரக்கமற்ற முறையில் இயல்பாக கன்சர்வேடிவ்தான் (பழைமைத் தன்மை உடையதுதான்), ஆனால் அது டால்ஸ்டாயின் பெரும் காப்பியத்திற்கும்  Pentateuch  அல்லது இலியட்டிற்கும்  [1] இடையே ஒரு உறவைத் தோற்றுவிக்கிறது.

உளரீதியான தோற்றங்கள் மற்றும் “அழகிய மாதிரிகள்” ஆகியவற்றிற்கு இடமளிக்கும் டால்ஸ்டாயின் இரு சமீபத்திய முயற்சிகள்முதலாம் பீட்டர் மற்றும் 1825 டிசம்பர்வாதிகள் உடைய வரலாற்றுக் கடத்தலாக வடிவமைப்பிற்குள் நெருக்கமான பிணைப்புகற் கொண்டவை என்று அவர் உணர்ந்துள்ளதுஇந்த இரு கால கட்டங்களையும் தீவிரமாக தன்மயமாக்கும் வெளிநாட்டுச் செல்வாக்குகளுக்கு அவருடைய விரோதப் போக்கு இருப்பதால் சிதைந்துவிடுகின்றனஆனால் நம்முடைய காலத்திற்கு அருகே எங்கெல்லாம் டால்ஸ்டாய் அணுகுகிறாரோ, 1877ல் வெளிவந்த அன்னா கரினீனா போன்றவற்றில்அவர் ஆதிக்கம் கொண்டுள்ளஒத்துவராத தன்மைக்கு உள்ளூர எதிர்ப்போக்கைக் காட்டிதன்னுடைய கலைப் பழமைத்தனத்தில் அசைந்து கொடுக்காமல் உறுதியாக இருந்துதன்னுடைய தொடுவானங்களின் பரப்பைக் குறைத்துரஷ்ய வாழ்வின் முழுமையிலும் நற்பண்பு என எஞ்சியிருக்கும் கானல் நீரை மட்டுமே தனியே காட்டிஅவற்றை பழைய மூதாதையர் வீடுமூதாதையர் ஓவியங்கள்மீண்டும் மீண்டும் தொடரும் ஆடம்பரமான லிண்டன் மரங்களின் நிழல் நிறைந்த பாதைகள் ஆகியவற்றை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கும் அதன் வடிவங்களை மாற்றாமல்பிறப்புஅன்புஇறப்பு என்ற சுழற்சியையும் அளிக்கிறார்.

இதன் பின் டால்ஸ்டாய் தன்னுடைய கதாநாயகர்களின் ஆன்மிக வாழ்க்கையை அவர்களுடைய தாய்நாட்டின் வாழ்வுடன் இணைந்த வகையில் விவரிக்கிறார்பரபரப்பு இல்லாமல்மேகம் மூடிய பார்வை என்று இல்லாமல்நிதானமாக. உள் உணர்வுகள்சிந்தனைகள்உரையாடல்களைக் கடந்து அவர் கூறுவதில்லைஎங்கும் செல்வதற்கு அவர் அவசரப்படுவதில்லைஒரு பொழுதும் எங்கும் தாமதமாகவும் செல்லுவதில்லைஏராளமான வாழ்க்கைகளைப் பிணைந்து ஒன்றாக்கும் வழிவகைகளை அவர் கையில் கொண்டுள்ளார்ஆனால் ஒருபோதும் தன் உறுதித் தன்மையை இழப்பதில்லைஒரு மகத்தான நிறுவனத்தின் தலைவர் அதன் பல பிரிவுகளையும் கவனத்துடன் கண்காணிப்பது போல் அவர் மனத்தளவில் ஒரு பிழையில்லாத இருப்புநிலைக் குறிப்பை இயற்றி வைத்துள்ளார்.இயற்கையை அனைத்துப் பணியையும் செய்யும்போது அவர் அதைக் கண்காணிக்கிறார் என்ற தோற்றம் மட்டும்தான் ஏற்படும்மண்ணில் ஒரு விதையை அவர் ஊன்றுகிறார்ஒரு நல்ல பாதுகாப்பாளர்போல் அது இயற்கையாக வளர்ந்துநல்ல கதிர்களைக் கொள்ள அமைதியாக அனுமதிக்கிறார்.  உவப்புடன் இருக்கும் காரடயேவ் தன்னுடைய இயற்கையின் விதிகளை மௌனமாக வழிபடுவது இதை ஒட்டித்தான்ஒரு மலராக இதழ்களை விரிக்க வேண்டும் என்பதற்காக அவர் ஒரு மொட்டைக் கட்டாயமாகத் தொட முற்படமாட்டார்பெருநகரங்களின் பண்பாடு,கலைத்தன்மை ஆகியவை பற்றி அவர் எதிர்த்துஆழ்ந்த விரோதப் போக்கையும் காட்டுகிறார்தன்னுடைய தன்னேயே விழுங்கும் பசியில் பெருநகரம் இயற்கையை மீறுகிறதுஅதைச் சித்திரவதைப்படுத்துகிறதுஅதன் வெளியீடுகளையும் சாராம்சங்களையும் வலியுறுத்திப் பெறுகிறதுஅதுவோ,தன்னுடைய நடுங்கிப் பிடித்துவிடும் விரல்களால் ஒரு கதிரவனின் கதிர் அலைக்கற்றையில் இல்லாத வண்ணங்களைத் தட்டில் தேடுகிறது.

அவருடையை அனைத்து மேதைத் தன்மையுடன் டால்ஸ்டாயின் ஓயிலும் ஒருங்கிணைந்துள்ளதுநிதானமாகபரபரப்பு இல்லாமல்சுருக்கமாக,கருமித்தனம் காட்டாமலும்அதே போல் துறவிப் பாங்கைக் காட்டாமலும்அது தசைப்பிடிப்பு நிறைந்ததுசில சமயம்  விலகிய தன்மையையும் கடினப் போக்கையும் காட்டும்மிக மிக எளிமையான நடை என்பதால் அதன் விளைவுகளுடன் ஒருபொழுதும் ஒப்பிட முடியாதது. (தன்னுணர்வுக் கவிதைகள் எழுதிநயமான நேசத்தைக் காட்டும்பெரும் உவப்பைக் காட்டித் தன் மொழியின் அழகை நன்கு அறிந்திருந்த டர்ஜினீவிடம் இருந்து டால்ஸ்டாய் மிகத் தொலைவில் இருப்பவர்அதேபோல் மிகத் தீவிரமாக,நெஞ்சை அடைக்கும் விதத்தில்தழும்புகள் நிறைந்த டாஸ்டாயெவ்ஸ்கியின் சொல்லாட்சியில் இருந்தும் தொலைவில் இருப்பவர்.

நகரவாசியானஅதிகாரமோபட்டமோ இல்லாதுதீர்க்கமுடியாத கத்தரி போன்ற  ஆன்மாவைக் கொண்ட மேதையான டாஸ்டோயெவ்ஸ்கி,கொடூரத்தையும்பச்சாத்தாபத்தையும் பேரழகில் படைக்கும் இக்கவிஞர்தன் புதினங்களில் ஒன்றில் தன்னை ஆழ்ந்தகுறிப்பிடத்தக்க வகையில் எதிரிடையாகக் காட்டிஒரு புதிய, “தற்செயலான ரஷ்யாக் குடும்பங்களைப்படைக்கும் கலைஞராகக் காட்டுகிறார்ஆனால் நிலக்கிழார்த் தன்மை நிறைந்த முழு வடிவங்களைப் பற்றி டால்ஸ்டாய் பிரபு இசைக்கிறார்.

நான் ஒரு ரஷ்ய நாவலாசிரியராகதிறமையும் கொண்டவராக இருந்தால்,என்னுடைய கதாநாயகர்களை நற்குடி ரஷ்யப் பிரபுக்கள் குடும்பத்தில் இருந்துதான் எப்பொழுதும் கொள்ளுவேன்ஏனெனில் இத்தகைய பண்பாடு உடைய ரஷ்ய மக்கள் மூலம்தான் அழகான ஒழுங்கையும்அழகான உணர்வுகளையும் வெளிப்படுத்தப்பட முடியும்…. இதை நான் ஒன்றும் நகைச் சுவையாகக் கூறவில்லைஇங்கு தேவையற்ற கருத்து நானே ஒன்றும் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லைஅது உங்களுக்கே தெரியும்… ஆனால் என்னை நம்புங்கள்நம்மிடையே மிக அழகியவை இருப்பது இதுவரை முழுவதும் இக்குடும்பங்களில்தான்.” என்று தன்னுடைய பாத்திரங்கள் ஒருவர் வாயிலாக டாஸ்டோயெவ்ஸ்கி கூறுகிறார். “எப்படிப்பார்த்தாலும்,இவர்களிடத்தில் நம்மிடையே அதிக முழுமைத் தன்மை உடையதுதான் காணப்படும்இதை நான் கூறுவதற்குக் காரணம் இந்த அழகின் சரியான தன்மை அல்லது உண்மையுடன் நான் சிறிதும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ளுவதுதான்உதாரணமாக இங்கு நாம் ஏற்கனவே கௌரவம்கடமை ஆகியவற்றில் முழுமை பெற்ற வடிவங்களைக் காண்கிறோம்இவை ரஷ்யாவின் முழுமை அடைந்துள்ள குடும்பங்கள் வேறு எவற்றிலும் காண்பதற்கில்லைசொல்லப்போனால்துவங்கக் கூட இல்லை….இதுதான் நாவலாசிரியரின் நிலைப்பாடு.” என்று டாஸ்டோயெவ்ஸ்கி தொடர்கிறார்டால்ஸ்டாயைப் பெயரிடாமல்ஆனால் ஐயத்திற்கு இடமின்றி அவரை மனதில் கொண்டு கூறுவது: “அத்தகைய நிலையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்அத்தகையவர் வரலாற்றுத் தன்மை தவிர வேறு எந்தவழியிலும் எழுத முடியாதுநம் காலத்தில் அழகிய வடிவங்கள் காணப்படவில்லைசில இடங்களில் அவற்றின் எச்சம் உள்ளது என்றால்பின் இருக்கும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில்அவர்கள் தங்கள் அழகுத்தன்மை எதையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை.”

அழகிய வடிவமைப்பு” மறைந்துவிடும்போதுகலைப் படைப்புத்திறனின் உடனடி நோக்கம் கீழே சரிந்துவிடுவது மட்டும் இல்லாமல்டால்ஸ்டாயின் அறவகையிலான நிர்ணயம்அவருடைய எழிலார்ந்த பன்முகப் படர்தல் ஆகியவற்றின் அஸ்திவாரங்களும் சரிந்துவிடுகின்றனடால்ஸ்டாயின் ஆன்மாவில் உள்ள புனிதப்படுத்தப்பட்ட காரடவேயிசம் அழிந்து கொண்டிருக்கிறதுமுன்பு சவாலுக்கு உட்படாத முழுமை என்று எடுத்துக் கொள்ளப்பட்டது இப்பொழுது ஒரு சிறு பகுதியாகிவிடுகிறதுஇதையொட்டி ஒரு பிரச்சினையின் அடையாளமாகவும் ஆகிறதுபகுத்தறிவார்ந்தது என்று இருந்தது பகுத்தறிவற்றதாக மாறுகிறதுமேலும் எப்பொழுதும் நடப்பது போல்உயிர்த்திருத்தல் அதன் பழைய  சொற்பொருளை இழந்துவிடும் கணத்தில்டால்ஸ்டாய் உயிர்த்திருத்தலின் பொருள் பற்றித் தன்னைத் தானே கேட்கத் தலைப்பட்டார்ஒரு பெரிய ஆன்மிக நெருக்கடி துவங்குகிறது (1870 களின் பிந்தைய பகுதிகளில்)—ஒரு இளைஞருடைய வாழ்வில் அல்லஒரு 52 வயது மனிதருடைய வாழ்வில்டால்ஸ்டாய் கடவுள் பக்கம் மீண்டும் வருகிறார்கிறிஸ்துவின் போதனைகளை ஏற்கிறார்தொழில்பகுப்பு முறையை நிராகரிக்கிறார்அத்துடன் அப்பண்பாடுஅரசாங்கம் ஆகியவற்றையும் நிராகரிக்கிறார்விவசாயத் தொழிலாளிக்காக உபதேசிப்பவர் ஆகிறார்எளிய வாழ்க்கை மற்றும் தீமையை வலிமையினால் எதிர்க்கும் நிலைப்பாட்டையும் துறக்கிறார்.

உள்ளார்ந்த நெருக்கடி ஆழமாகிறதுஅவரே ஒப்புக் கொண்டுள்ளபடி ஐம்பத்தியிரண்டு வயது கலைஞர் நீண்டகாலம் தற்கொலை பற்றிச் சிந்திக்கிறார்இது இன்னும் வியப்புஏனெனில் இறுதி முடிவு காட்டுவது போல் டால்ஸ்டாய் தொடக்கக் கட்டத்திற்கே மீண்டும் திரும்பிவிட்டார்.விவசாயத் தொழிலாளர் தொகுப்பு – போரும் அமைதியும் என்னும் பெருங்காப்பியத்தின் தளம் இது அல்லவாஎளிய வாழ்க்கைகுறைந்த பட்சம் ஆன்மிக அளிவில் அதில் மூழ்குதல்மக்களின் இயல்பான தன்மையில் என்பதுஇதில்தான் குடுஜோவின் வலிமை உள்ளதுசக்தி மூலம் தீமையைஎதிர்க்காமல் இருப்பது விதியைத் தாழ்ந்து ஏற்பது என்ற காரடயேவின் முழு நிலைப்பாட்டிலும் இதுதானே உள்ளது?

அது அவ்வாறானால்டால்ஸ்டாயின் நெருக்கடியில் உள்ளது என்னஇதைப்பற்றிக் கூறுகையில்முன்பு எது இரகசியமாகவும் மனத்தடியிலும் இருந்ததோஅது இப்பொழுது தளத்தைப் பிளந்து கொண்டு முழு உணர்வுப் பகுதிக்கு வருகிறதுஇயல்பாக உள்ளே இருக்கும் ஆன்மிகத் தன்மைஅதைப் பிறப்பித்த “இயற்கையுடன்” மறைந்துவிட்டது என்றால்ஆன்மா உள் முழு உணர்வின் தேடுதலைத் துவங்குகிறதுஅந்த இயல்பான இணக்கம்வாழ்வில் இயல்பான தன்மையே அதை எதிர்த்து நின்றபோதுஇனி சிந்தனையின் முழு உணர்வுச் சக்தியால்தான் காப்பாற்றப்பட முடியும்இந்த பழைமைத்தனமான போரட்டத்தில் (அவருடைய அற மற்றும் எழிலார்ந்த தற்காப்பு நிமித்தம்),கலைஞர் தன்னுடைய உதவிக்குத்  தத்துவவாதி-அறம் கூறுபவரை அழைத்துக் கொள்ளுகிறார்.


இந்த இரு டால்ஸ்டாய்களுள்ஐரோப்பாவில் அதிகப் புகழை அடைந்தவர் கவிஞரா அல்லது அற உபதேசகராஎன்று நிர்ணயிப்பது எளிதல்லஎப்படியும்,மூத்த யாஸ்நயா போலியானா பற்றி முதலாளித்துவப் பொதுமக்களின் பெருந்தன்மை காட்டும் சிரிப்பிற்குப் பின்னணியில்ஒரு விந்தையான அறநெறித் திருப்தியும் அடங்கியள்ளதுஒரு புகழ்பெற்ற கவிஞர்மில்லியனர்,“நம் பிரிவைச் சேர்ந்த ஒருவர்”, போதாது என்று உயர்குடிப் பிறந்தவர்அறநெறி நம்பிக்கையை ஒட்டி ஒரு விவசாயியின் சட்டை அணிந்து கொள்ளுகிறார்சாதாரணக் காலணிகளில் நடக்கிறார்மரத்தை வெட்டுகிறார்,இவை அனைத்தும் ஒரு முழு வர்க்கத்தின்,ஒரு முழுப் பண்பாட்டின் பாவங்களுக்கு உறுதியானமீட்பு என்பது போல்ஆனால் இது ஒன்றும் ஒவ்வொரு சிறு முதலாளித்தவத்தைச் சேர்ந்தவரையும் டால்ஸ்டாயை சற்றே தாழ்ந்த விதத்தில் பார்த்தலைத் தடுத்துவிடவில்லை அதேபோல் அவர் முழுத் தெளிவுடன் உள்ளாரா என்பது பற்றி ஐயத்தையும் இலேசாகக் கிளப்புவதையும் தடுக்கவில்லைஇங்கு குறிப்பிடப்பட வேண்டியது அதிகம் அறியப்படாத மாக்ஸ் நோர்டௌ [2], பழையநேர்மையான சாம்வெல் ஸ்மேல்ஸின் [3] தத்துவத்தை சற்றே அவநம்பிக்கைத் தன்மையுடன் கூடியதைஎடுத்துக் கொண்ட பண்புள்ள மனிதர்களில் ஒருவர்,  அதை ஞாயிற்றுக்கிழமை படிக்கும் கட்டுரைகளுக்காக விதூஷகரின் உடையில் அளிப்பது போல் ஆகும். Lombroso [4] குறிப்புப் பொருளுரையைக் கையில் வைத்துக் கொண்ட நிலையில்நோர்டௌ இழிசரிவின் அனைத்துச் சமிக்ஞேகளையும் கண்டுபிடிக்கிறார்இத்தகைய சிறு கடைக்காரர்கள் அனைவருக்கும் புத்திகெட்டத்தனம் எங்கு இலாபம் நின்றுவிடுகிறதோஅங்கு துவங்கிவிடுகிறது.

ஆனால் இந்த பூர்ஷ்வா பக்தர்கள் டால்ஸ்டாயை சந்தேகத்துடனோ,விந்தையுடனோ அல்லது ஆதரவுடனோஎப்படிக் கருதினாலும்அவர்கள் அனைவருக்கும் அவர் ஒரு மனோ தத்துவ வகைப் புதிர்தான்இரு சில பயனற்ற சீடர்களையும் பிரச்சாரகர்களையும் தவிரஅவர்களுள் ஒருவரான மென்ஷிகோவ் [5], இப்பொழுது ஒரு ரஷ்ய ஹாம்மெர்ஸ்டின் [6] பங்கைக் கொண்டுள்ளார்அவருடைய வாழ்வின் கடைசி முப்பது ஆண்டுகளில் அறநெறியாளர் டால்ஸ்டாய்தான் முற்றிலும் தனியே உயர்ந்து நிற்கிறார் என்று கூறவேண்டும்.

இது உண்மையிலேயே ஒரூ தீர்க்கதரிசி நடுக்காட்டில் ஓலம் இடுவதின் சோகம் ததும்பிய நிலை ஆகும்தன்னுடைய பழைமைத்தன விவசாயப் பரிவுணர்வுகளிடன் ஆதிக்கத்தின்கீழ் முற்றிலும் இருந்த நிலையில்,டால்ஸ்டாய் இடைவிடாமல்சலிப்பின்றிதன்னுடைய ஆன்மிக உலகை வெற்றிகரமாக அதை அனைத்துப்புறப் பாதிப்புக்களிடம் இருந்தும் காத்து வெற்றியடைந்தார்தனக்கும் ஒவ்வொருவித பூர்ஷ்வா தாராளவாதத்திற்கும் இடையே இறுதியாக ஓர் ஆழ்ந்த அகழ் ஒன்றை அவர் வெட்டி வைத்தார்;முதலில் அவர் “நம் காலத்தில் எங்கும் படர்ந்திருக்கும் முன்னேற்றம் பற்றிய மூட நம்பிக்கையை” ஒதுக்கினார்.

மின்சாரம்தொலைபேசிகள்கண்காட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள்தொகுப்புக்கள் உள்ள ஆர்கேடியா பூங்காவனங்கள் இருப்பது அனைத்தும்,அவற்றின்சிகரெட்டுக்கள்தீப்பெட்டிகள்ஸஸ்பெண்டர்கள்இயந்திரங்கள் அனைத்துடனும் நல்லதுதான்ஆனால் நான் அவை அனைத்தும் கடலின் அடியே இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்அவை மட்டுமில்லாமல்இரயில்பாதைகளும்உற்பத்தி செய்யப்படும் பருத்தி மற்றும் உலகிலுள்ள கம்பளித் துணகளும்கூடத்தான்ஏனெனில் அவற்றை உற்பத்தி செய்வதற்கு 100 பேரில் 99 பேர் அடிமைகளாக இருந்து இவை உற்பத்தி செய்யப்படும் ஆலைகளில் ஆயிரக்கணக்கில் அழிந்துபடுவர்.” என்று அவர் புலம்புகிறார்.

தொழில்பகுப்பு முறையால் நம்முடைய வாழ்வு அலங்கரிக்கப்பட்டுஉயர் செழிப்பு அடையவில்லையாஆனால் தொழில்பகுப்பு முறை உயிர்த்துள்ள மனித ஆன்மைவையும் சிதைக்கிறதுதொழில்பகுப்பு முறை அழுகிப்போகட்டும்ஆனால் உண்மையான கலை எல்லா மக்களையும் கடவுள் என்ற கருத்தின்கீழ் ஒன்றுபடுத்த வேண்டும்பிரிக்கக் கூடாது.நம்முடைய கலை உயரடுக்கிற்கு மட்டுமே பணிபுரிகிறதுமக்களைப் பிளவுறச் செய்கிறதுஎனவே அது ஒரு பொய் ஆகும்ஷேக்ஸ்பியர்,கோத்தேதன்னுடையதுவாக்னர் மற்றும் பொக்லினுடைய கலையைத் “தவறானது” என்று டால்ஸ்டாய் தைரியமாக நிராகரிக்கிறார். [7]

வணிகம்செல்வக் கொழிப்பிற்கு உறுதுணையாக நிற்கும் அனைத்துப் பொருட்களிடம் இருந்தும் அவர் தன்னை பிரித்துக் கொள்ளுகிறார்எளிய விவசாயிகளின் ஆடைகளையே அணிகிறார்பண்பாட்டை நிராகரிக்கும் ஒரு அடையாளச் சடங்கைச் செய்வது போல்ஆனால் இந்த அடையாளச் செயலின் பின் எது பதுங்கியுள்ளது? “பொய்க்கு” எதிராக அது எதை எதிர்க்கிறதுஅதாவது  வரலாற்று வழிவகையையா?

அவருடைய படைப்புக்களின் அடிப்படையில்நாம் டால்ஸ்டாயின் சமூகத் தத்துவத்தை அளிக்க முடியும்நமக்கு சற்று வன்முறை இதனால் ஏற்பட்டாலும்கீழேயுள்ள “நடைமுறை” கருத்தாய்வுகளின் வடிவில் அவை இருக்கும்.

1. ஏதோ இரும்புப் பிடி போன்ற சமூகச் சட்டங்கள் ஒன்றும் மக்களை அடிமைப்படுத்தும் முறையைத் தோற்றுவிப்பதில்லைசட்டத் தொகுப்புக்கள்தான் தோற்றுவிக்கின்றன.

2. தற்கால அடிமை முறை மூன்று சட்ட வகைகளில் உள்ளனநிலச் சட்டங்கள்வரிச் சட்டங்கள் மற்றும் சொத்துரிமைச் சட்டங்கள் என.

3. ரஷ்ய நாடு என்று இல்லாமல் ஒவ்வொரு நாடுமே வன்முறை,பாதுகாப்புமுறை மற்றும் கொடூரமான குற்றங்கள் புரிவதின் மூலம் நீடிக்கும் அமைப்பாக உள்ளது.

4. உண்மையான சமூக முன்னேற்றம் சமய மற்றும் அறநெறி மூலம் வரும் தனிநபருக்கான சுய முழுமை மூலம்தான் அடையப்பட முடியும்.

5. “அரசாங்கங்களை அகற்றுவதற்கு அவற்றிற்கு எதிராக வெளி வழிவகைகள் மூலம் போராட வேண்டிய தேவை இல்லைதேவைப்படுவதெல்லாம் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்காமல் இருந்துஅதில் பங்கு பெறாமல் இருப்பதுதான்.

a. சாதாரண வீரர் அல்லது பீல்ட் மார்ஷல்மந்திரிகிராம மூத்தவர்,நடுவர்குழு உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என்று எந்தப் பதவியையும் ஏற்காமல் இருத்தல்.

b. அரசாங்கத்திற்கு தன்னார்வத்துடன் நேரடி அல்லது மறைமுக வரிகள் கொடுக்காமல் இருத்தல்.

c. அரசாங்க அமைப்புக்கள் அல்லது அரசாங்க நிதிகளை ஊதியங்கள்,ஓய்வூதியங்கள் என்றோ வாங்காமல் இருத்தல்.

d. அரசாங்கம் வன்முறை நடவடிக்கைகள் எடுக்கும்போது ஒருவருடைய சொத்தைப் பாதுகாக்காமல் இருத்தல்.

இந்தத் திட்டத்தில் இருந்து நான்காம் கருத்தை நாம் அகற்றினோம் என்றால்அது தெளிவாகத் தனியே நிற்கிறதுசமயஅறநெறி சுய முழுமையைப் பொறுத்ததுபின் நாம் ஒரு முழுமையான பெருங்குழப்பத் திட்டத்தைப் பெறுகிறோம்முதலில்சமூகம் ஒரு தீமையான சட்டக் கருத்தாய்வின் வகையிலான முற்றிலும் இயந்திரத் தன்மை உடையதுஅடுத்துபொதுவாக அரசாங்கம் மற்றும் அரசியலை முறையாக மறுப்பதுமற்றும் இறுதியாக,போராட்டத்தின் வழிவகையாகஒரு செயலறு எதிர்ப்பு வகை பொது வேலைநிறுத்தம் மற்றும் பொதுப் புறக்கணிப்புஆனால் சமய-அறநெறிக் கருத்தாய்வை அகற்றிவிட்டோம் என்றால்நாம் உண்மையில் இந்த முழுப் பகுத்தறிவார்ந்த கட்டமைப்பையும் அதன் கட்டமைப்பாளரையும் பிணைக்கும் ஒற்றை நரம்பை அகற்றிவிடுகிறோம்அதாவது லெவ் டால்ஸ்டாயின் ஆன்மாவைஅவரைப் பொறுத்தவரையில்அவருடைய வளர்ச்சி நிலைப்பாடு ஆகியவை அனைத்தின் காரணமாகமுதலாளித்துவ ஒழுங்கிற்குப் பதிலாக “கம்யூனிஸ” அனார்க்கிசத்தை நிறுவுதல் என்பது பணி அல்லபொதுச் சமுதாய-விவசாய ஒழுங்கை “வெளியில் இருந்து வரும்” அழிவுதரக்கூடிய செல்வாக்குகளில் இருந்து காப்பாற்றுவதுதான் பணியாக உள்ளது.

அவருடைய “ஜனரஞ்சகத்தைப் போலவை” அவருடைய “அனார்க்கிசத்திலும்டால்ஸ்டாய் பழைமையான விவசாய நலன்களைத்தான் பிரதிபலிக்கிறார்.தொடக்க ப்ரீமேசன்களைப் போல்சிந்தனைப் போக்குகள் மூலம் சமூகத்தில் சாதித் தொகுப்பின் அறமான பரஸ்பர உதவியை வலுப்படுத்தி மீட்பது என்பது பொருளாதார வளரச்சியின் தாக்குதல்கள் இயற்கையாகவே சிதைந்து வந்ததில்டால்ஸ்டாய் ஒரு சமய-அறவழிச் சிந்தனைமூலம் முற்றிலும் இயற்கையான பொருளாதாரத்தின்கீழ் வாழ்க்கையைப் புதுப்பிக்க முற்படுகிறார்.

இப்பாதையில் அவர் ஒரு பழைமைவாத அனார்க்கியராக (அராஜகவாதம்)மாறுகிறார்ஏனெனில் அவருக்கு முதலிலும் முக்கியமானதுமாக தேவைப்படுவது அரசாங்கம்இதன் இராணுவவாதச் சாட்டைகள்அதன் மத்திய கருவூலத் தேள்களுடன் அனைத்தையும் காப்பாற்றும் காரடயேவ் சமூகத்தை அமைதியாக வாழவிட வேண்டும் என்பதுதான்இரு உலகங்களுக்கும் இடையேபூர்ஷவா மற்றும் சோசலிசத்திற்கு இடையேஉலகம் தழுவிய முறையில் நடக்கும் போராட்டம் பற்றி டால்ஸ்டாய்க்கு எந்தக் குறிப்பும் இல்லைஅதன் விளைவில்தான் மனிதகுலத்தின் விதி விளிம்பில் நிற்கிறது என்பதையும் அறியவில்லைஅவருடைய பார்வையில் சோசலிசம் எப்பொழுதும் தாராளவாதத்தின் ஒரு பிரிவாகத்தான் இருந்ததுஅதில் அவருக்கு அக்கறை சிறிதும் இல்லைஅவருடைய பார்வையில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் பாஸ்டியல் [8] இருவருமே ஒரே “தவறான கொள்கையான” முதலாளித்துவப் பண்பாட்டின்நிலமற்ற தொழிலாளர்களின்,அரசாங்க வற்புறுத்தலுக்கு இணங்கும் தொகுப்பின் பிரதிநிதிகள்தாம்.பொதுவாக ஒருமுறை மனிதகுலம் ஒரு தவறான பாதையில் சென்றுவிட்டால்இந்தப் பாதையில் எவ்வளவு தூரம் பயணித்துள்ளோம் என்பது ஒரு பொருட்டல்லமீண்டும் முதல் நிலைக்குத் திரும்பினால்தான் விமோசனம் பிறக்கும்.

நாம் நீண்ட காலம் மிக மோசமாக “வரலாற்றுசமூக மற்றும் பிற முன்னேற்றப் பாதைகளின் விதிகள்” படி தொடர்ந்து இருப்போம் என்றாலும்நம் வாழ்வு எப்படியும் தானே இறுதியில் நல்ல தன்மையைப் பெற்றுவிடும் என்று வாதிடும் அறிவியல் கருத்திற்கு எதிராகச் சாடுவதற்கு போதிய சொற்கள் இல்லாமல் டால்ஸ்டாய் திணறினார்.

இப்பொழுதே தீமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்இதற்காக தீமை என்பது தீமைதான் என்பதைப் புரிந்து கொண்டாலே போதும்மக்களை ஒன்றாகப் பிணைத்துள்ள அனைத்து அறநெறி உணர்வுகளும் அனைத்து அறநெறிச்-சமய கட்டுக்கதைகள் என்று இந்தப் பிணைப்புக்களில் இருந்து தோன்றுபவை அனைத்தும் டால்ஸ்டாயால் மிக சூட்சுமமான அன்பு,பொறுமைசெயலற்ற எதிர்ப்பு ஆகியவற்றின் கட்டளைகளாக ஆக்கப்படுகின்றனஇக்கட்டளைகளுக்கு வரலாற்றுப் பொருளுரை ஏதும் இல்லாததால்அதையொட்டி எந்தப் பொருளுரையுமே இல்லாததால் அவை அவருக்கு எல்லாக் காலங்களிலும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் எனத் தோன்றுகிறது.

டால்ஸ்டாய் வரலாற்றை ஒப்புக் கொள்ளவில்லைஇது அவருடைய சிந்தனையின் அடிப்படைகள் அனைத்திற்கும் ஒரு தளத்தைக் கொடுக்கிறது.இதில்தான் அவருடைய மறுப்பு மற்றும் அவருடைய உபதேசங்களில் நடைமுறை செயலற்ற தன்மை அனைத்தும் தத்துவார்த்தச் சுதந்திரத்தைக் கொண்டுள்ளனஅவர் ஏற்றுக் கொள்ளும் மனித வாழ்வுசமானா மாநிலத்தின் அதிக மக்கள் வசிக்காத புல்வெளிகளில் வாழும் யூரல்-கோசக்கினரின் முந்தைய வாழ்வுவரலாற்றுக்குப் புறத்தே நடந்ததுஇது இடைவிடாமல் தன்னையே மறு உற்பத்தி செய்து கொண்டதுதேன்கூடு போல அல்லது கரையான் புற்றுப் போலவரலாறு என்று மக்கள் அழைப்பது பொருளற்ற தன்மைபொய்க்காட்சிகள் மற்றும் கொடுமைகளின் விளைவு ஆகும்இவை மனிதகுலத்தின் உண்மையான ஆன்மாவைச் சிதைத்துவிட்டனசிறிதும் அச்சமின்றி டால்ஸ்டாய் தன்னுடைய மரபியத்தையும் வரலாற்றுடன் சன்னல் வழியே தூக்கி எறிகிறார்.

தற்பொழுதைய வரலாற்றின் ஆவணங்களைப் போல் அவருக்கு செய்தித்தாட்களும் இதழ்களும் வெறுப்பைத் தந்தனஉலகப் பெருங்கடின அனைத்து அலைகளையும் அவர் தன் மார்பினால் எதிர்த்து விரட்டுவார்.அவருடைய வரலாற்றுக் குருட்டுத்தனம் உலக சமூகப் பிரிச்சினைகள் குறித்து சிறு குழந்தை போல் உதவியற்ற நிலையில் தள்ளியதுடால்ஸ்டாயின் தத்துவம் சீன ஒவியத்தை ஒத்துள்ளதுமுற்றிலும் வேறான சகாப்தங்களின் கருத்துக்கள் ஒரு முன்னோக்கில் இருத்தப்படாமல்ஒரே தளத்திலேயே இருத்தப்படுகின்றனபோருக்கு எதிராக அவர் முழுத் தர்க்க வாதங்களைத் தொடங்குகிறார்அவற்றை வலியுறுத்துவதற்காகஎபிக்டெடஸ் [9] மற்றும் மோலினரி (10] உடைய வாதங்களை முன்வைக்கிறார்லாவோ சே [11] மற்றும் இரண்டாம் பிரெடரிக்கின் வாதங்களை முன்வைக்கிறார்;தீர்க்கதரிசி இசையா மற்றும் கட்டுரையாளர் ஹார்டௌயின்பாரிஸ் நகர வணிகர்களின் அசரீரிக் குரல்களையும் முன்வைக்கிறார்அவருடைய பார்வையில் எழுத்தாளர்கள்தத்துவமேதைகள் மற்றும் தீர்க்கதரிசிகள் அனைவரும் தங்கள் காலத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லையாண்டும் நீடிக்கும் அறநெறி வகைகளைத்தான் பிரதிபலிக்கின்றனர்.

அவருடைய கண்ணோட்டத்தில் கன்ப்யூசியன் ஹார்ப்பகஸுடன் 13] தோளோடு தோள் உராய்கிறார்ஷோபன்ஹார் யேசுவுடன் மட்டும் இல்லாமல்மோசசுடனும் இணைந்து நிற்கிறார்அனைத்து வரலாற்றுப் பகுப்பாய்விற்கும் எதிரான சோகம் ததும்பிய அவருடைய ஒற்றைப் போராட்டத்தில்அவர் தன்னுடைய ஆம் -ஆம் அல்லது இல்லை-இல்லை என்பதை எதிரிடையாக வைக்கிறார்அவருடைய மேதைத் தன்மையின் உறதிப்பாட்டிற்கு முற்றிலும் உகந்த வகையில். “மனிதனுடைய நிலை மற்றும் மனிதனுடைய அறநெறிச் செயல்களுக்கும் இடையே உள்ள பொருத்தமற்ற தன்மை உண்மையின் உறுதியாள அடையாளம்  ஆகும்என்று அவர் கூறுகிறார்ஆனால் இந்த உயர் சிந்தனைப் பெருமிதம் அதற்குள் அதன் தண்டனையைக் கொண்டுள்ளதுவரலாறு மிகக் கொடுமையாக டால்ஸ்டாயை நடத்தியது போல் வேறு ஒரு எழுத்தாளரைப் பார்ப்பது அரிதுஅதுவும் அவருடைய விருப்பத்திற்கு எதிராக.

ஒரு மறுப்பாளரும்சமயப் புதிருமான அவர்அரசியல்புரட்சிக்கு விரோதியான அவர்பல ஆண்டுகளாக அவருடைய குறைகூறலை பல ஜனரஞ்சகப் பிரிவுகளின் குழப்பமான புரட்சிகர முழு உணர்வுடன் வளர்த்து வருகிறார்.

முதலாளித்துவப் பண்பாட்டின் அனைத்துக் கூறுபாடுகளையும் மறுப்பவர்,ஐரோப்பியஅமெரிக்க பூர்ஷ்வாக்களின் நலம் சார்ந்த ஒப்புதலைப் பெறுகிறார்;அவருடைய உபதேசங்களில் அவர்கள் தங்கள் நோக்கமற்ற மானுடத்தையும்,புரட்சிகர மாற்றத்திற்கு எதிரான ஒரு உளரீதியான கேடயத்தையும் காண்கின்றனர்.

பழமைவாத அனார்க்கியர்தாராளவாதத்தின் பெரும் விரோதியான டால்ஸ்டாய் தன்னுடைய எண்பதாம் பிறந்த நாளில் ரஷ்யத் தாராளவாதத்தின் உரத்தபூசலுக்கு நிற்கும் அரசியல் வெளிப்பாட்டிற்கு ஒரு பதாகையாகவும்ஆயுதமாகவும் தான் இருப்பதைக் காண்கிறார்.

அவர்மீது வரலாறு ஒரு வெற்றி கொண்டுவிட்டதுஆனால் அவரைச் சிதைப்பதில் தோல்வியுற்றதுஇப்பொழுதும் கூட அவருடைய முதிர்ந்த வயதில் அவர் அறநெறி இகழ்வைக் காட்டும் தன் விலைமதிப்பற்ற குணத்தைத் தக்க வைத்துள்ளார்.

மிகத்தீமையானமிகக் குற்றம் சார்ந்த வரலாற்றிலுள்ள புரட்சி எதிர்ப்பின் உச்சக்கட்டத்தில் [14], அது நம் நாட்டின் சூரியனை சிறைகளில் தள்ளுவதற்கான இறுகிய நாற்றைத் தேட முற்படுகிறதுஇழிந்த,கோழைத்தன உத்தியோகப்பூர்வ மக்கள் கருத்தை நெரிக்கும் சூழலில்இந்தக் கிறிஸ்துவ மன்னிப்பின் கடைசி இறைபணியாளர்பழைய ஏற்பாட்டின் சீற்றமிகு தீர்க்கதரிசி இறக்காமல் உள்ள நிலையில்தன்னுடைய துண்டுப்பிரசுரத்தை Cannot Keep Silent  ஐ தூக்கிலிடுபவர்களாகச் செயல்படுபவர்களின் தலைமீது சாபமாகவும்மௌனமாக அதைப் பார்ப்பவர்கள் மீது கண்டனத்தையும் எறிகிறார்.

நம்முடைய புறநிலை புரட்சிகர இலக்குகளுக்கு ஒரு பரிவுணர்வை அவர் காட்ட மறுத்தாலும்அதற்குக் காரணம் வரலாறு அவருக்குத் தனிப்பட்ட முறையில் அதன் புரட்சிகரப் பாதைகளைப் புரிந்து கொள்ளுவதை மறுத்துவிட்டது என்பதை நாம் அறிவோம்அவரை இதற்காக நாம் கண்டிக்க வேண்டிய தேவையில்லைஅவருடைய பெரும் மேதைத் தன்மைக்கு மட்டும் இல்லாமல்மனிதனுடைய கலை வாழ்வு நீடிக்கும் வரை அது மடியாதுஅவருக்குச் சற்றும் வளைந்து கொடுக்காமல் இருந்த அறநெறித் தைரியத்திற்கும்தான்அதுதான் அவரை அமைதியாக அவர்களுடைய போலித்தன திருச்சபைக் கூட்டத்தில் சேர அனுமதிக்கவில்லை,அவர்களுடைய சமூகத்திலும்அவர்களுடைய அரசாங்கத்திலும் அனுமதிக்கவில்லைஆனால் அவருடைய எண்ணற்ற பாராட்டுபவர்களுக்கு இடையே தனிமையில் தள்ளியது.

லியோன் ட்ரொட்ஸ்கி
செப்டம்பர்
 1908

இறுதிக் குறிப்புக்கள் :
1. இலியட் டிராய் முற்றுகை பற்றிய பண்டைய கிரேக்கக் கவிதை.மரபார்ந்த வகையில் இதன் ஆசிரியர் நீண்ட காலமாக கண்பார்வையற்ற ஹோமர் என்று கருதப்படுகிறதுஅவர்தான் இரண்டாம் மிகப் பெரிய கிரேக்கக் காவியமான ஓடிசி  யையும் எழுதியதாகக் கருதப்படுகிறார்.

2. மாக்ஸ் நோர்டௌ (1849-1923). ஹங்கேரி நாட்டு எழுத்தாளர்சமூக விமர்சகர்தியோடோர் ஹெர்செலுடன் உலக ஜியோனிச காங்கிரசை நிறுவியவர்The Conventional Lies of our Civilization (1883)Degeneration (1892), Paradoxes (1896)   ஆகியவற்றை எழுதியவர்.

3. சாமுவெல் ஸ்மைல்ஸ் (1812-1904): தன்னை முன்னேற்றுவித்துக்கொள்ளப் பயன்படும் நூல்களை எழுதிய ஸ்காட்லாந்து எழுத்தாளர்இவற்றுள் மிகப் புகழ் பெற்றது Self-Help.

4. சீசர் லாம்ப்ரோசோ (1836-1909). புகழ் பெற்ற இத்தாலிய உளவியல் மருத்துவர்குற்றத் தடயத் துறையில் புகழ் பெற்றவர்குற்றத் துறையில் பல மனித இனங்கள் என்ற ஒரு புதிய திட்டத்தை நிறுவியவர்ஒரு குறிப்பிட்ட குற்றம் சார்ந்த தன்மையுடையவர்கள் சில இயல்பான உடல்கூறுகளையும் கொண்டு விளங்குகின்றனர் என்று நம்பியவர்.

5. மிகைல் ஒசிபோவிச் மென்ஷிகோவ் (1859-1918). ரஷ்யச் செய்தியாளர்.அறநெறி பற்றிய உயர் சிந்தனைக் கட்டுரைகளை எழுதத் துவங்கிபின்னர் 1880களில் பெருகிய முறையில் பிற்போக்குவாதியாக இறுதியில் ரஷ்ய தேசியம்செமிடிய எதிர்ப்பிற்கு வாதிடுபவர் என்று முடிந்தார்செப்டம்பர் 1918ல் சேக்காவால் சுடப்பட்டார்.

6. வில்ஹெல்ம் ஹாம்மெர்ஸிடின் (1838-1904). ஜேர்மனிய அரசியல்வாதி,ரீச்ஸ்டாக்கில் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்பிற்போக்குத்தனசெமிடிய எதிர்ப்பு நாளேடு Kreuzzeitung ன் ஆசிரியர்.

7. ஆர்னோல்ட் பொக்லின் (127-101) ஸ்விட்ஸர்லாந்தின் அடையாள வகை ஓவியர்

8. பிரெடரிக் பாஸ்டியட் (1801-1850), பிரெஞ்சுப் பொருளாதார வல்லுனர்,மான்செஸ்டர் பயிலகத்தின் பிரதிநிதிமுதலாளித்துவத்திற்கு வாதிடுபவர்,சோசலிசத்தின் விரோதி.

9. எபிக்டீடஸ் (55 - 135 கி.பிகிரேக்க கலங்காத் தன்மைத் தத்துவ மேதை

10. கஸ்டாவ் டி மொலினரி (1819-1912). பெல்ஜியப் பொருளாதார வல்லுனர்,மான்செஸ்டர் பயிலகத்துடன் தொடர்புடையவர்பிரெடரிக் பாஸ்டியட்டுடன் தொடர்புடையவர்.

11. லாவே சே (லாவோசி), சீன தத்துவமேதைகன்பூசியஸ் சகாப்தத்திற்கும் முந்தையவர்

12. இரண்டாம் பிரெடரிக் (1712-1786) பிரஷ்ய அரசர், “அறிவு ஒளிசான்ற வல்லாட்சியின்” முகற்கியப் பிரதிநிதிகளில் ஒருவர். நடைமுறையில் ஹோகன் ஜோலர்ன் சர்வாதிகாரத்திற்கு உதாரணம். போருக்கு எதிரான கட்டுரைகள் ஒன்றில் (“Think it Over!” 1904) டால்ஸ்டாய்பிரெடரிக்கின் அறிக்கை ஒன்றை மேற்கோளிட்டுள்ளார்: என்னுடைய வீரர்கள் சிந்திக்கத் தலைப்பட்டுவிட்டால்ஒருவர் கூட இராணுவத்தில் இருக்க மாட்டார்கள்."

13. ஹார்பகஸ்மெடிய அரசர் அஸ்டைஜேஸின் மந்திரிகி.மு.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்ஹெரோடட்டஸ்  கூற்றுப்படி சைரஸைக் கொல்ல வேண்டும் என்ற உத்தரவை ஹார்பகஸ் மறுத்தபடியால்அஸ்டைஜேஸ் அவருடைய ஒரே மகனைக் கொன்று அவருடைய உடல் சதையை ஒரு விருந்தின்போது ஹார்பகஸுக்குக் கொடுத்தார்.

14. இங்கு ட்ரொட்ஸ்கி ரஷ்யாவில் 1905 புரட்சிக்குப் பின் நிலவிய அச்சுறுத்தும் ஆட்சி பற்றிக் குறிப்பிடுகிறார்.