Showing posts with label பாலாவுடன் உரையாடல். Show all posts
Showing posts with label பாலாவுடன் உரையாடல். Show all posts

Friday, 28 February 2025

பாலாவுடன் உரையாடல் - 3

மெய்யழகன் படம் பார்த்தபின் எனக்கு ஏற்பட்ட உணர்வுகள் :

நாம் ஒன்றுமே இல்லையென்று நினைக்கிற சின்ன விஷயம் சிலருக்கு முக்கியத்துவமானதாக இருக்கும். சிலர் நிதானமாக நின்று இரசிக்கிற விஷயங்கள் நமக்கு சில்லறைத்தனமாகத் தோன்றும். காரணம், எல்லாவற்றிலும் நமக்கு ஏதோ ஒரு அவசரம். ஈடுபாடின்மை. அப்படி அவசரப்படாதீர்கள் என்று உட்கார வைக்கிற படம் இந்த மெய்யழகன். 

அருள்மொழியுடைய(அரவிந்த்சாமி) ஜீவன், அவன் பிறந்து வளர்ந்த அந்த ஊரிலும் அந்த வீட்டிலும் இருக்கிறது. அதை அவனிடமிருந்து இளவயதிலேயே பிரித்துவிட்டார்கள். ஒருகாலத்தில் எல்லோரிடமும் அன்பாக இருந்தவன் தன்னை எங்கோ தொலைத்துவிட்டான். தொலைத்த இடத்தில்தானே தேடவேண்டும்?

அருள்மொழி தன்னைத் தொலைத்த இடத்துக்கே மீண்டும் வந்து தன் உறவுகளைச் சந்திக்கிறான். அந்த உறவுகளில் ஒருவனைச் சந்திக்கிறான். அவனுடைய பெயரோ அடையாளமோ என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெயர் தெரியாதவன் மூலம்தான் தன்னை யாரென்றே கண்டுபிடிக்கிறான். 

அருள்மொழிக்கு யாரென்றே தெரியாதவன், அருள்மொழி பின்னாலே மெச்சுகிற குணங்களைக் கொண்டவன், "இந்த குணங்களை உங்ககிட்ட இருந்துதான் பாத்து கத்துக்கிட்டேன்" என்று சொல்கிறான். ஒருவனின் தன்னுணர்வு நிலையின் ஆழத்தில் போய் தாக்குகின்ற நொடிகளை, Goosebumps moments ஐ எல்லாம் இந்த மாதிரி ஆர்ப்பாட்டமில்லாமலும் காட்டலாம். 

அருள்மொழியைச் சின்னவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன் மெய்யழகன். ஒவ்வொரு தடவையும் அவனைப் பார்க்கிற விதத்திலேயே சொல்லிவிடலாம். மரியாதை, பிரமிப்பு, அன்பு எல்லாமும் இருக்கும். "உங்களை அவருக்கு ரொம்ப பிடிக்கும்"னு மெய்யழகனின் மனைவி அருள்மொழியிடம் சொல்லும்போதே அவ்வளவு அன்பு இருக்கும். 

இந்தப் படத்தில் அருள்மொழியும் மெய்யழகனும் பல இடங்களில் உரையாடிக்கொள்வார்கள். இரண்டு பேருக்குமிடையில் பெரிய வித்தியாசம் இருக்காது. இதில் அருள்மொழி தன்னைத் தொலைத்திருப்பான். மெய்யழகன், அருள்மொழியின் இளவயதுக் குணங்களோடு இருப்பான். அருள்மொழியின் soul மெய்யழகனிடம் இருக்கும். 

இரண்டு பேரும் ஆண் என்பதற்கு அழகான வரையறை. அதீதமான உணர்வுகள் உள்ளவர்கள். குடும்பப் பொறுப்புள்ளவர்கள். தங்கள் பார்வையில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறவர்கள். அன்பானவர்கள். இரசனையுள்ளவர்கள். சின்னைச் சின்ன விடயங்களோடும் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கிறவர்கள். அதற்காகக் கலங்குகிறவர்கள். 

இறுதியில் அருள்மொழி தன்னை யாரென்று மெய்யழகன் ஊடாகக் கண்டுபிடிக்கிறான். முடிவை விட, அவர்கள் ஒருவரையொருவர் தொலைத்து, பின் தேடிக் கண்டுபிடித்து எப்படி அன்பு பாராட்டத் தொடங்குகிறார்கள் என்பதே அழகான பயணம். 

எப்பொழுதும் ஆக்ரோஷமும் அதிரடியுமல்ல சினிமா. சின்னச் சின்ன நினைவுகளால், சின்னச் சின்ன சந்தோஷங்களால் ஆனதுதான் மனித உணர்வுகள் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறோம். இதில் கொண்டாட நிறையவே சின்னச் சின்ன விஷயங்கள் இருக்கிறது. 

சைக்கிள் எவ்வளவு முக்கியம் என்பது அது இலகுவில் கிடைக்காதவர்களுத்தான் தெரியும். மெய்யழகனுக்குத் தான் தெரியும். நாம் நாமாக இருந்து சினிமாவைப் பார்ப்பதைவிட மெய்யழகனாகவும் அருள்மொழியாகவும் இருந்து பார்க்கவேண்டும். அப்படிப் பார்த்து இரசிப்பதற்குரிய அத்தனை தகுதியும் இந்தப் படத்திற்கும் உண்டு.

பாலாவுடன் உரையாடல் - 2

கில்லி கோட்டி Vs கிரிக்கெட்


இன்றைக்கு நவீன காலத்தில் ஆடப்படும் முன்னணி ஆட்டங்கள் அனைத்திற்கும் நிகராக எண்பதுகளில் பதின்பருவ சிறுவர்கள் ஆடியோ ஒரு ஆட்டத்தை முன்னிறுத்துவது என்பது ஒரு அசாதாரணமான காரியம். முதலில் இந்த கான்செப்ட்டை சிலர் வரவேற்றனர். அவர்கள் வரவேற்றதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியம். ஆனால் இதே கான்செப்ட்  சிலர் நக்கலடிக்கவும் செய்தனர். ஆனால் அவர்கள் ஏன் இதனை நக்கலடித்தனர் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

இன்றைய உலகத்தில் சாதிக்கப்பட்டவைகள் அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் கேளிக்கைக்குறியதாக பரிகசிக்கப்பட்டவைகள் தான் என்பதும் நமக்கு தெரிந்தே இருக்கிறது.

நாம் இந்த கான்செப்டில் கில்லி கோட்டி வெர்சஸ் கிரிக்கெட் என்பதாக தேர்வு செய்ததற்கான காரணத்தை நாமே உள்வாங்கிக் கொள்வது அவசியம். அது ஆய்வுக்குரிய ஒன்றும் கூட.  

காரணம் கிரிக்கெட்டில் உள்ள கூறுகள் அனைத்தும் கில்லி கோட்டியிலும் இருக்கிறது என்பதே இதன் பிரதான அம்சம்.

கிரிக்கெட்டின் பிரமாண்டம் என்பது உலகமயமாக்களின் பின்னணியில் உருவான பொருளாதார நிலை. தொழில்நுட்ப ரீதியில் அதன் சந்தை மற்றும் உருவாக்கம். டிஜிட்டல் வடிவில் அதன் காட்சி வழியே  விரிவடையும் சர்வதேச அரசியல். காணக் கிடைக்காத உலகளாவிய அதன் பார்வையாளர் மட்டம். 

கில்லி கோட்டியின் கற்பனா ரீதியான பிரம்மாண்டம் என்பது  ஒருங்கிணைந்த கிராமங்களின் வழியாக கட்டமைக்கப்பட வேண்டிய அதன் பிரம்மாண்டமான  இறுதிக் காட்சி வடிவம். உதாரணமாக சங்கமம் படத்தில் வரும் இறுதிப் பாடலின் காட்சி அமைப்பு. 

நாசர் ஒரு பேட்டியில் நாட்டுப்புற கலைகளில் ஒன்றான தெருக்கூத்தை பிரம்மாண்டமான வடிவில் அரங்கேற்ற வேண்டும் என்ற தனது வேட்கையை தெரிவித்திருந்தார்.

நிகூகி வா தியாங்கோவின்  சிலுவையில் தொங்கும் சாத்தான் நாவலில் பிரம்மாண்டமான சிம்பொனி ஒன்றை கட்டமைக்க வேண்டும் என்ற கனவுடன் மாட்டா டாங்கா வண்டியில் பயணிக்கிறான் ஓர் இசை மாணவன் .


1. Ameros Berros படத்தில் வரும் நாய்ச் சண்டை பந்தயம்.

2. Gangster மத்திய நிகழும் வெட்டுக்கிளி பந்தயம்.

3. தமிழ்நாட்டில் நிகழும் சேவல் சண்டை.

4. ஜல்லிக்கட்டு கூட ஒரு புராதான விளையாட்டு தான்.

5. Spain, Portugal, Southern France, Mexico, Ecuador, Venezuela-வில் நிகழும் காளைச் சண்டை கூட ஜல்லிக்கட்டு தான்.

பாலாவுடன் உரையாடல் - 1

பாலா, இதைவிட சிறப்பாக எழுத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள வேறுபாட்டை, கதாசிரியனுக்கும் இயக்குனருக்கும் உள்ள வேறுபாட்டை பல பல வருடங்கள் பழகிய பல படங்களில் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் பணியாற்றிய ஒரு நண்பனுக்கு, உலக அளவில் கதை சொல்லும் முறை, அதை திரைக்காட்சியாக கொண்டு வருவதில் தோல்நுட்ப ரீதியாக படிப்படியாக ஏற்பட்ட மாற்றங்கள் இவைகளை நுட்பமான அளவில் உள்வாங்கிய உங்களை ராஜன் உள்வாங்கவில்லையே என்று எனக்குத் தெரிகிறது. இது குறித்து முன்னமே பேசித்தான் இருக்கிறோம். இன்றைய தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் ஸ்டீரியோடைப் கதை சொல்லல் அது படமாக்கப்பட்ட விதம் திரைக்கு வந்து தோற்றுக் கொண்டிருப்பது நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் இந்த குறிப்பிட்ட இயக்குனர்கள் அவர்கள் பெரிய சினிமா பட்டறை என்று நினைத்து அவர்களிடமிருந்து வரும் உதவி இயக்குனர்கள் திருந்துவதே இல்லை. 90-க்கும் மேற்பட்டவர்களின் நிலை இதுதான். இதை சாபக்கேடு என்பதா? தலைகுனிவு என்பதா? தெரிந்தே சூடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதா? கிராமத்தில் இப்படி சொல்வார்கள். ' ஆமா இன்னமோ பெரிய படிப்பு படிச்சானாம். இது கூட தெரியல ' என்று. மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் அடுத்த கட்டத்துக்கான முதல் செயல். 'மாற்றம் ஒன்றே மாறாத விதி' முதலில் இவர்களை கடந்தால் தான். நாம் நினைக்கும் ஒன்றையே உருவாக்க முடியும். நினைத்ததை எல்லாம் சரியாகவே சொல்லி விட்டீர்கள் பாலா.. இதற்கு மேல் நான் என்ன சொல்ல.. உங்கள் வழி தெளிவானது. அறிவானது. அறிவியல் பூர்வமானது. நாளைய சினிமாவுக்கானது. நடை போடுங்கள். நான் இருக்கிறேன். கோபித்துக் கொண்டாலும் நான் நீங்கள் போகும் வழியில் மரித்துக் கொண்டு முன் நிற்பேன். என்னை ஒரு முறை ஏறிட்டு பார்த்துவிட்டு என்னிடம் எதுவுமே நடக்காதது போல் இயல்பாக பேசுவீர்கள். நாமும் அப்போதைக்கான உரையாடலில் தொடங்குவோம். நம்மிடம் தொடர்வது. இதுதான் நமது நட்பு. இதற்கு மேல் வேறு என்ன இருக்கப் போகிறது. ராஜன் நமக்கு என்றும் நண்பன் அவ்வளவுதான். அவன் பேசாமல் போனாலும் அவன் எனக்கு நண்பன் தான். அதுதான் உங்களிடம் என்னிடம் உள்ள பண்பு. ஆரண்ய காண்டத்தில் இப்படி ஒரு வசனம் வரும். சம்பத் அந்தப் பையனிடம் கேட்பார். 'உங்க அப்பாவ உனக்கு ரொம்ப பிடிக்குமா..' 'பிடிக்காது'... 'அப்ப ஏன்டா இவ்வளவு ரிஸ்க் எடுக்குற'... 'ஏன்னா அவரு என் அப்பா' அப்படின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பான். இதுதான் பாலா நட்பு இயங்கும் விதமும் குடும்பங்களுக்குள் இருக்கும் நமது உறவுகள் இயங்கும் விதமும். நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன் பாலா. ராஜனுக்கு நீங்கள் புரிய வைக்க நினைத்ததை தமிழில் மொழி பெயர்த்து படித்தபோது இப்போது நான் சொல்லி இருப்பதைவிட இன்னும் ஏராளமானது மனதில் ஓடுகிறது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முடியாது அல்லவா? எண்ணற்ற கேள்விகளோடு முடிக்கிறேன். 

இன்னும் ஒன்று :

ராஜன் உங்கள் ஸ்கிரிப்டில் சிலவற்றை மாற்ற சொன்னான் அல்லவா? நீங்களும் இது சரியான ஃபார்மில் தான் இருக்கிறது என்று நினைத்தாலும் ராஜனுக்காக மனதை தேற்றிக்கொண்டு சில மாற்றங்களை உங்கள் ஸ்கிரிப்டை ரீரைட் செய்தீர்கள் அல்லவா? எதை ரீரைட் செய்தீர்களோ. அதை எடுத்துவிட்டு. எதை நீங்கள் எழுதி இருந்தீர்களோ அதை மறுபடியும் அதே இடத்தில் எழுதுங்கள். ஜப்பானிய ஐந்து விதிகள் : 'செய்ரி, செய்டன், செய்ஸோ, செய்கெட்ஸு, ஷிஸுகே' முதல் விதியே இது தான். 'செய்ரி'. எடுத்த பொருளை அதே இடத்தில் வையுங்கள். மாற்றி வைக்கும் போது நீங்களும் குழம்பிப் போவீர்கள். அடுத்தவர்களும் குழப்பிப் போவார்கள். கடைசி விதி பற்றி நான் உங்களுக்கு சொல்லியா தெரிய வேண்டும். நீங்கள் தெளிந்து விட்டீர்கள் என்று சொல்லவில்லை பாலா திரும்பி விட்டீர்கள். பந்து இதயத்தில் மோதவில்லை. சுவற்றில் மோதியது. கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறேன். நிறுத்திக் கொள்கிறேன். 


தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...