ஹெய்லே கெரீமா
"சினிமாவை, நீங்கள் சினிமாப் பள்ளிகள் கல்லூரிகளுக்குச் சென்று கற்கத் தேவையில்லை. ஒரு நல்ல கலைஞன் சினிமாவை கல்லூரிகளில் கற்றுக் கொள்ளவும் முடியாது. இன்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்ட நாடுகளிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் சினிமாவை வேறெங்கு சென்றும் கற்றுக் கொள்வது. அவ்வளவு சுலபமில்லை.
நீங்கள் இருக்கும் இடத்திலேயே சினிமாவை உருவாக்க முயலுங்கள். நண்பர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள். தோள் போட்டுக் கொள்ளுங்கள். உனது பாட்டி, மற்றவரின் தாய், மற்றொருவரின் மகன், இன்னொருவரின் மாமா இவர்கள்தான் பாத்திரங்கள். இவர்கள் வாழ்வைத் தேடிப் போங்கள். இவர்கள் வாழ்வில் காதல் இருக்கிறது, துக்கம் இருக்கிறது, கோபம் இருக்கிறது, அடிமைத்தனம் இருக்கிறது, எதிர்ப்புணர்வு, சாவு, இசை, நடனம், பாடல், பறவைகள், மரம் செடி கொடி, பிராணிகள், இயற்கை எல்லாம் இருக்கிறது. இவர்கள் வாழ்ந்ததை, வாழ்விருந்து கனவைச் சொல்லுங்கள்.
சினிமா, ஒரு கருவி. ஒரு சாதனம். ஒரு ஆயுதம். உங்கள் சிந்தனையின் நீட்சி. உங்கள் செயலின் நீட்சி. நீங்கள் நினைப்பதை தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சினிமா அப்போது தோன்றும்"
- ஹெய்லே கெரீமா
No comments:
Post a Comment