Sunday 1 April 2018

Anonymous திரைப்படம் : ஷேக்ஸ்பியர் மீதான ஓர் அறிவீனத் தாக்குதல்

டேவிட் வோல்ஷ் (David Walsh) 






Independence Day, Godzilla, The Patriot மற்றும் The Day After Tomorrowபோன்ற படங்களை இயக்கியதன் மூலமாக ரோலண்ட்  எமெரீச்ஆங்கில மொழியின் ஒரு தலை சிறந்த  இலக்கியவாதி குறித்த கதையைப் படமாக்க தம்மைத் தாமே தயார் செய்திருந்தார்மெல் கிப்சனோடு சேர்ந்து அவர் செய்திருந்த The Patriot  திரைப்படம் "ஒரு நகைப்பிற்கிடமான படைப்பென்றும், "கருத்துக்களையும்குறிக்கோள்களையும் பொதுவாக இந்த அளவிற்கு கீழ்மட்டத்தில் வைத்திருக்கக்கூடிய  நம்முடைய இந்த காலகட்டத்தில்  மட்டும்தான் அத்திரைப்படத்தை  ஆழமானவொன்றாக எடுத்துக்கொள்ள  முடியுமென்றும் நான்  2000-ல்  விமர்சித்திருந்தேன்.


அவருடைய அழிவுகரமான மற்றும் பயங்கரமான படங்களும் மற்றும் அமெரிக்க புரட்சிகர வரலாற்றிற்குள் அவரின் தவறான வழிகாட்டும் முயற்சியும் இரண்டிலுமே ஜேர்மனில் பிறந்த எமெரீச் தம்மைத்தாமேவாய்ஜம்பத்திற்கும்சிக்கலற்றதாக காட்டுவதற்கும் மற்றும் பக்குவமற்ற தன்மைக்கும்  அர்ப்பணித்து விட்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார்அவர் அவருடைய முந்தைய துரதிருஷ்டவசமான முயற்சிகளை  மிக எளிமையாக Anonymous  படத்திலும் பொருத்தியுள்ளார்.


ஆங்கில நாடக எழுத்தாளரும்கவிஞருமான வில்லியன் ஷேக்ஸ்பியரால் (1564-1616) எழுதப்பட்ட மூன்று டஜன் அல்லது அந்தளவிற்கான நாடகங்களின் உரிமையாளர் அல்லமாறாக அவை 17ஆம் Earl of Oxford ஆன Edward de Vere –ஆல் எழுதப்பட்டவை என்பதே இந்த புதிய படத்தின் சர்ச்சைக்குரிய அடித்தளமாக உள்ளதுஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருக்கும் இந்த கருத்துமுற்றிலுமாக உள்-ஆதாரங்கள் (ஆக்ஸ்போர்டு ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர் இல்லை, அதேவேளை ஷேக்ஸ்பியர் ஒரு கவிஞராக இருந்தார்) மற்றும் வெளி-ஆதாரங்கள் (இதுகுறித்து தனிப்பட்ட மற்றும் வரலாற்று ரீதியிலான  நிறைய உண்மைகளைக் குறிப்பிட்டுக் காட்டலாம்என இரண்டினாலும் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளனஉண்மையில் எமெரீச் மற்றும் அவரின் திரைக்கதை எழுத்தாளர் ஜோன் ஓர்லோஃப் இருவரும் அந்த தத்துவத்தை ஏற்கிறார்களா இல்லையா என்பது தெளிவாக இல்லைஒருவேளை ஓர்லோஃப் அதை ஏற்றிருக்கலாம்ஆனால் ஆக்ஸ்போர்டின் கோட்பாட்டை எமெரீச் பகிரங்கமாக ஆதரிக்கின்ற போதினும்அவர் அதைப்பற்றி பெரிதும் பொருட்படுத்தவில்லை போல் தெரிகின்றதுஇந்த படம் வெறுமனே அவரின் கேள்விக்குரிய கண்டுபிடிப்புகளை எடுத்துக்காட்ட மற்றொரு சந்தர்ப்பமாக உள்ளது.

Anonymous படத்தின் முறுக்கிக்கிடக்கும் கதையை விவரிப்பதுஅதை மதிப்பிழக்கச் செய்வதாகும். “Anonymous” என்ற தலைப்பில் ஒரு படைப்புசமகாலத்திய நியூயோர்க் நகர நாடக அரங்கில் நடந்து வருகிறதுதொடக்கத்தில்டெரெக் ஜேகோப் மேடையில் நடந்து வந்து,  ஒருவித முன்னுரையை அளிக்கிறார். அதில் "ஒரு கையுறை செய்பவரின்மற்றும் ஒரு "இலக்கண பள்ளி" பட்டதாரியின் ஒரு சாதாரண மகனான ஷேக்ஸ்பியர்அத்தகையவொரு பிரமாண்டமான படைப்பை உருவாக்கி இருக்க முடியுமென்பது குறித்து சந்தேகத்தை எழுப்புகிறார்கூறப்பட வேண்டிய ஒரு "மறைந்துகிடக்கும் கதை" ஒன்று உள்ளதாகஅவர் ஆரவாரத்துடன் நமக்கு அறிவிக்கிறார்.


அங்கேயிருந்து நாம் கம்யூட்டரால் உருவாக்கப்பட்ட சுமார் 1600-ஆம் ஆண்டின் இலண்டனுக்குஅப்போதைய நாட்களில் அதிகாரபூர்வ வாரிசு இல்லாத முதலாம் எலிசபெத் (Vanessa Redgrave)  ஆட்சிகாலத்துக்குபின்னோக்கி அழைத்துச் செல்லப்படுகிறோம்அந்த காலகட்டம் அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வருவது யாரென்ற கேள்வியைச் சுற்றி அரசியல் சூழ்ச்சிகளால் நிறைந்திருக்கிறது. எலிசபெத்தின் வெளியுறவுத்துறை செயலாளரும்உளவுத்துறை தலைவருமான  ரோபர்ட் சிசெல் (Edward Hogg) ஸ்காட்லாந்து மகாராணி மேரியின் மகனான ஆறாம் ஜேம்ஸை இங்கிலீஷ் அரியணைக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்கிறார். (இதன் விளைவாகஇங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸாக ஆகக்கூடியவர்.)

முக்கிய பிரபுத்துவ பிரமுகர்கள் பலரும்அவர்களின் மையத்தில் Earl of Essex (Sam Reid) மற்றும் Earl of Southampton-ம் (Xavier Samuel) சிசெலுக்கு எதிராக உள்ளனர். வில்லியம் சிசெல்லினால்  (David Thewlis) உயர்த்தப்பட்டவரும்ராணி எலிசபெத்துக்கு முக்கிய ஆலோசகருமான Earl of Oxford (Rhys Ifans), ஜேம்ஸை பதவியேற்றுவதற்கு எதிராக அவர்களின் ஒரு மிகவும் மதிநுட்பமுடைய கூட்டாளியாக இருக்கிறார்வில்லியமின் மகனும்அந்த பதவிக்கு பிரதியீடாக இருக்கக் கூடியவருமான மற்றும் ஒரு கூனி வில்லனுமான முன்னர் மேலே குறிப்பிடப்பட்ட ரோபர்ட்கணிசமான அளவிற்கு அவர்களுக்கு எதிராக வெறுப்பை கொண்டிருக்கிறார்.

கதை வளர வளரஒரு விடலைச்சிறுவனாக  ஆக்ஸ்போர்டுக்கு இளம் எலிசபெத்துடன் (Joely Richardson- இவர் Redgrave-ன் மகள்)  தொடர்பு  இருந்தது நமக்கு தெரிய வருகிறதுஅப்பெண் மூலமாக அவர் ஒரு மகனுக்கு (இவரும்கதையில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறார்தந்தையாகிறார்அவர் செய்த ஒரு கொலைக்குற்றத்தை மூடிமறைக்க  பிரதியீடாகநாடகங்கள் எழுதுவதை விட்டுவிட்டுஅன்னெ சிசெலை மணம் முடிக்க வேண்டுமென அவர் அச்சுறுத்தப் படுகிறார்மிகவும் அசாதாரணமான விதத்தில்தகாத உறவு ஒட்டுமொத்த காதல் விவகாரத்தையும் மிஞ்சிவிடும் விதத்தில்ஆக்ஸ்போர்டே எலிசபெத்தின் அந்த தகாத உறவில் பிறந்த மகனாக எமக்கு காட்டப்படுகின்றது.

இதற்கிடையில்ஆக்ஸ்போர்டு அவருடைய பழைய மற்றும் புதிய நாடகங்களை (படத்தில்எல்லாவிதத்திலும் ஒரு திறமைசாலியாக காட்டப்படும்  Earl   அவருடைய  எட்டாவது வயதிலேயே  A Midsummer Night’s Dream எழுதியதாககூறப்படுகிறது!) இலண்டன் நாடக அரங்கங்களில்  அப்போது (அதாவது 1600 அல்லது அதற்கடுத்த காலக்கட்டத்தில்பென் ஜோன்சனின் பெயரை இட்டு, அரங்கேற்றுவதற்குஅவரால் பென் ஜோன்சன் (Sebastian Armesto)  நாடகாசிரியராக நியமிக்கப்படுகிறார்தம்முடைய நாடகங்கள் மூலமாக மக்களின் (“ஒருகும்பலின்”) பார்வையிலும்இராணியின் பார்வையிலும் கூட Essex  தூக்கி நிறுத்த முடியுமெனவும் மற்றும் சிசெல் மற்றும் ஜேம்ஸின் நிலையை மதிப்பிழக்க செய்யலாம் என ஆக்ஸ்போர்டு நம்புகிறார்படைப்புகளை வெளியில் கொண்டு வருவதற்கு ஜோன்சன் உடன்படுகிறார்ஆனால் அவற்றில் அவருடைய பெயரை இடுவதிலிருந்து பின்வாங்குகிறார்ஒரு தொடக்கமாக, ஓரளவிற்கு மட்டுமே படித்த ஒரு கோமாளி நடிகரான  வில்லியம் ஷேக்ஸ்பியர் (Rafe Spall) ஆக்ஸ்போர்டின் படைப்புகளுக்குரிய பெருமையை மிகவும் பணிவடக்கதோடு ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்.


ஷேக்ஸ்பியரின் (ஆக்ஸ்போர்டின்) Richard III நாடகத்தை  அரங்கேற்றுவதை Anonymous திரைப்படம்  அதன் உச்சக்கட்ட காட்சியில் காட்டுகிறது. Richard III  நாடகம் அதன் மையத்தில்ஒரு விகாரமான இராட்சஷரையும் (இது ரோபர்ட் சிசெலின் சமகாலத்தியவர்களை நினைவுபடுத்தும் நோக்கம் கொண்டது), மற்றும்  பெப்ரவரி  1601இல் Earl of Essex-ன் கிளர்ச்சியையும் கொண்ட  ஒரு துன்பியல் நாடகமாகும்அந்த கிளர்ச்சி படத்தின் பல முக்கிய கதாபாத்திரங்களுக்கு  நாசகரமான விளைவுகளைக் கொண்டிருக்கிறது.

அனைத்திற்கும் முதலாவதாக, "மறைந்து கிடக்கும் கதையைக்குறித்த எமெரீச்சின் இந்த படம் ஓர் ஆழமான குறுகிய-புத்தியுடன் கூடிய படைப்பாகும். ஆங்கில மொழி வரலாற்றில் மிகச்சிறந்த நாடகாசிரியர்களின்  (ஷேக்ஸ்பியர், ஜோன்சன்கிறிஸ்டோபர் மார்லோவின் மற்றும் தோமஸ் நாஷே மற்றும் தோமஸ் டெக்கர் உட்பட பல சிறிய பிரபலங்களின்ஒரு குழுவை பொய்யர்கள்குண்டர்கள்அறிவற்றவர்கள்உளவாளிகள் மற்றும் மோசமானவர்களாக ஏன் ஒன்றிரண்டு குறிப்பிடத்தக்க சாதாரண சமகாலத்திய கலைஞர்கள் சித்தரிக்க விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் வேலையை நான் உளவியல் நிபுணர்களிடம் விட்டுவிடுகிறேன்இதில் பொறாமை மற்றும் சுய-நியாயப்படுத்தலின் அடையாளங்களை ஒருவரால் காண முடியுமா?

ஷேக்ஸ்பியர் குறித்த விளக்கம் மிகவும்  முட்டாள்தனமாகவும்தாக்குதலாகவும் இது உள்ளதுஉண்மையில், 37 பிரபலமான நாடகங்களின் உரிமையை Earl of Oxford -க்கோ அல்லது வேறு எவருக்கோ உரித்தானது என கூற விரும்புவதை பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஓர் எழுத்தாளரைஅரைகுறை படிப்போடு தற்பெருமை பேசும் ஒருவராககுடிகாரராக மற்றும் … கொலைகாரராக காட்டுவதன் மூலம்  பலப்படுத்துமா?

Anonymous திரைப்படம் வெறுப்புக்கு ரியதாகவும்விரும்பத்தகாததாகவும் இருப்பதோடுபொதுவாக  அது சலிப்பூட்டுவதாகவும், ஓய்ந்து போனதாகவும் உள்ளதுவழக்கமாக குடிப்பதையும்ஷேக்ஸ்பியர் தாசிமாரோடு திரிவதையும், சிசெலியர்கள் சூழ்ச்சி செய்வதையும், Essex  மற்றும் Southampton ஆணவத்தோடு, துணிச்சலோடு அடியெடுப்பதையும் (இந்த பரிதாபத்திற்குரிய காட்சிகள் Steve CooganRob Brydon ஆகியோரின் The Trip: “பெரிய மனிதர்களேகட்டிலுக்கு செல்லுங்கள், நாங்கள் விடியலில் எழுவோம்!” என்ற பகட்டணி ஆடைகளுடனான நாடக காட்சிகளை எமக்கு ஞாபகப்படுத்துகின்றனகுளோப் தியேட்டரில் ஆஹா-ஓஹோவென்று நடப்பதையும்இதர பிறவற்றையும் காட்டும்  Mermaid Tavern  நகர  காட்சிகள் எலிசபெத்திய  காலகட்டத்தின் மாறா படிவுருவின்  கையேட்டிலிருந்து எடுக்கப்படுகின்றன.

Ifans, Thewlis, Redgrave, Hogg மற்றும் Jacobi உட்பட பல சிறந்த திறமையான நடிகர்கள் இரக்கமேயில்லாமல் வீணாக்கப்பட்டுள்ளனர்சிறிய கதாபாத்திரங்கள் அல்லது முக்கியமற்ற காட்சிகளில்  கூட பொதுவாக சிறப்பாக பிரகாசிக்கும் Redgrave, முதிர்ந்த முடியாட்சியாளராக தோன்றும் தனது பாத்திரத்தில் நம்பிக்கையற்றவராகவும், வெறுமனே வெறுக்கத்தக்கவராக உள்ளார். Earl of Oxford-ன் கரங்கள்  Hamlet, King Lear மற்றும் ஏனைய பிரமாண்ட படைப்புகளை எழுதுகின்ற அதே காலத்தில்எலிசபெத்திய போலிஸ் அரசு ஒடுக்குமுறைக்குள்ளேயே பெண்களை கவரும் மாவீரரைப் போல அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சாத்தியமற்ற வேலையைஓர் அருமையான நகைச்சுவை நடிகரான Ifans செய்கிறார்ஒட்டுமொத்த விஷயமும் பகுத்தறிவிற்கு ஒவ்வாததாக உள்ளது.

கீழ்நிலையிலிருக்கும் ஒரு கையுறை தயாரிப்பாளரின் மற்றும் ஒரு இலக்கண பள்ளி பட்டதாரியின் மகன் இந்த குறிப்பிடத்தக்க படைப்புகளை உருவாக்கி இருக்க சாத்தியமுள்ளதா என்பதன் மீது எலிசபெத்திய சகாப்த ஏளனங்களைக் குவித்துவிட்டுஅதற்கு பதிலாக இங்கிலாந்தின் மிகவும் மேம்பட்ட குடும்பங்களில் ஒன்றிலிருந்து ஒரு தளர்ந்து போன மேற்குடியாளரை விரும்பும்வெற்று-மூளை கற்பனைகளால் நிறைந்திருக்கும் சமகாலத்திய ஹாலிவுட் மேற்தட்டை என்ன கூறுவது?



எமெரீச்சும்ஓர்லோஃப்பும் அவர்களது படைப்பின் மீதான எவ்விதமான எதிரான விமர்சனமும் ஒரு  "கருத்து முரண்பட்டமற்றும்  "தைரியமான"படைப்பைக் கொண்டுகல்வித்துறை - ஷேக்ஸ்பியர் தொழிற்துறையை நிலைகுலைய செய்துவிட்டதற்கான ஆதாரம் என காட்ட முனைகின்றனர். படத்தின் மடைமைகளோடு அவர்கள் எதிர்பட்டதும், 'வரலாறும்வரலாற்று படங்கள் அனைத்தும் வெறுமனே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்பதால்அதை கண்டு ஏன் ஒருவர் எரிச்சல்பட வேண்டும்?' என்ற இரண்டாந்தர  போலி பின் நவீனத்துவ வாதத்தின் பாதுகாப்பிற்குள்  அவர்கள் ஒளிந்து கொள்கிறார்கள்.

ஒரு நிகழ்ச்சியில்ஷேக்ஸ்பியரில்  இருந்த சில பிழைகளைஓர்லோஃப் வேகவேகமாக சுட்டிக்காட்டினார்: “இப்போதெல்லாம்  ஷேக்ஸ்பியர் எல்லா டங்களிலும்  வரலாற்றோடு விளையாடுகிறார்அவை வரலாறு அல்ல ; அவை நாடகம். … நாம் நாடகாசிரியரை தொடர்ந்து கொண்டிருக்கிறோம், ” இது அவர் நேர்காணல் செய்த ஒருவரிடம் கூறியதுஇது குறித்து ஒருவர் என்ன கூறுவது?
டொரோண்டோ பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித்துறை இணை பேராசிரியரும்டொரோண்டோ மிஸ்சிஸ்சௌகா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் நாடகத்துறையின் தலைவருமான ஹோல்கர் செமி அவருடைய வலைப்பதிவில் எழுதியது: “அடிப்படையில்பதினாறாம் நூற்றாண்டின் எந்தவொரு நிகழ்வுகளுக்கு இருக்கும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களின் ஒட்டுமொத்த கையிருப்புகளையும் தவிர்த்துவிட்டுநிச்சயமாக எமெரீச்சும் ஓர்லோஃப்பும் அவர்களின் வரலாற்றின் மெய்யியல் என்ன சொல்கிறதோஅதன்படி அவர்களுக்கு மனதில் பட்ட அளவிற்கு உரிமை எடுத்துள்ளனர்.”
செமி தொடர்ந்து எழுதுகிறார், “தெளிவாக – இந்த திரைப்படமும்அதன் அர்த்தமற்ற திரைக்கதையும் வரலாறு குறித்து  சிறிதும் அக்கறைப்படவில்லை. அதுவொரு திரைப்பட  இயக்குனரின் தனியுரிமைகள்ஆனால் பின்னர் ஏன் ஓர்லோஃப்பும்எமிரீச்சும் அதையே இரண்டு வழிகளில் அடைய முயல்கின்றனர்? Tudor காலத்திய இங்கிலாந்தைக் குறித்து ஒட்டுமொத்த கல்வித்துறைசார் இலக்கிய மேதைகள் மற்றும் வரலாற்றாளர்களின் சமூகத்தையும் விடஎழுத்தாளரும்இயக்குனரும் மட்டுமே சிறந்த புரிதலைக் கொண்டிருப்பதாக படம் முழுக்க சொல்லப்படுவதுஅளவுக்கதிகமான வெற்றுத்தீனியில் உட்கார்ந்திருப்பது போன்று சிறிது எரிச்சலூட்டுகிறது.”



கதையின் முரண்பாடுகள் மற்றும் அபத்தங்களுக்கு அப்பாற்பட்டு, (தகாத உறவில் எத்தனை குழந்தைகளை எலிசபெத் பெற்றார்அந்த தலைச்சிறந்த நாடகங்களின் ஆசிரியர் ஷேக்ஸ்பியராக இருக்க முடியாதென்று துல்லியமாக அறிந்த ஷேக்ஸ்பியரின் நாடக உலக சகாக்களில் யாருமே ஏன் அவரை அம்பலப்படுத்திக்காட்ட  தீவிரமாக ஒன்றுமே செய்யவில்லைஅறிவார்ந்த ஒற்றர் படைத் தலைவர் சிசெலும்அவருடைய கடினமாக உழைக்கும் ஒற்றர்களைக் கொண்ட வலையமைப்பும்தங்களின் மூக்கின் கீழே தான் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டமுதன்மை கூனி கதாபாத்திரத்தையும் கொண்ட, Richard III-ன் தயாரிப்பு நடந்து வருகிறதென்று ஏன் அறிவிக்கின்றன? ஆக்ஸ்போர்டு ராணி தான் அவர் தாய் என்று அறியும் நேரமான (இந்தஇடத்தில் எலிசபெத்திற்கு அது தெரியவில்லை), அவர்களின் மகனைக் குறித்து ஆக்ஸ்போர்டிற்கும் எலிசபெத்திற்கும் இடையில் நடப்பது தான் இறுதி உரையாடலாஇது சிறிது … குழப்புவதாக உள்ளது?), இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டுபடத்தில் இருக்கும் எலிசபெத்திய காலத்து இலக்கிய வாழ்வு குறித்த உண்மைகள் முற்றிலுமாக தவறாக போகிறது.

பேராசிரியர் செய்ம் சிலவற்றை குறிப்பிடுகிறார். 1598-ல் நாடகாசிரியர்களின் கும்பலை நாம் முதன்முதலில் சந்திக்கும் காட்சி குறித்து அவர் கவனிப்பது: "Shoemaker’s Holidays-ன் தோல்விக்காக Marlowe [தோமஸ்டெக்கரை எள்ளி நகையாடிவரலாற்று நாடகாசிரியர்கள் மத்தியில் ஒப்புயர்வற்ற நிலையில் இருப்பதாக ஏளனஞ் செய்கிறார்பெரும்பாலும் 1593-ல் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்பதால்அப்போது அந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வரலாற்று நாடகத்தைக் கூட Marlowe எழுதியிருக்காத நிலையில்அது நகைச்சுவையாக உள்ளதுமேலும்டெக்கனின் நாடகம் 1599 வரையில் எழுதப்பட்டிருக்கவில்லை. (இது பதிவு செய்யப்பட்ட உண்மைஇதில் பிரபலமான மற்றும் மோசடியானஅரச சதியின் நினைவுச் சின்னமும் உள்ளதுஇல்லையென்றால் இது Henslowe’s Diary  என்று அறியப்பட்டிருக்கும்.)



அவர் தொடர்கிறார் : “சில தேதிகள் குறித்து என்ன கூறுவது? 1558-ன் Midsummer Night’s Dream  நிச்சயமாக கவர்ச்சிகரமானதுநிச்சயமாக கூறுவதானால், Richard III-ஐ விட கவர்ச்சிகரமானது. "நம்முடைய மனக்குறையைத் தீர்க்க வந்திருக்கும் குளிர்ச்சிஎன்றெல்லாம் 1601இல் உற்சாகத்தோடு புதியதாக விளம்பரப்படுத்தப் படுவது  விரல்விட்டு எண்ணக்கூடிய நாடக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும்அவர்கள் ஏற்கனவே 1597-ல் அதை அச்சுக்கு கொண்டு வந்தனர்அல்லது 1598-ல் இரண்டாம் பதிப்பை அச்சுக்கு கொண்டு வந்தனர். Essex  எழுச்சியின் காலக்கட்டத்தில், வருந்தும்படியாக ஒரு கூனி இல்லாத, Richard II -ன்  பாத்திரப்படைப்பு குறித்து பல பார்வையாளர்கள் பேசினர் என்பது கூடுதலாக சிறிது பிரச்சினையாக உள்ளது என்பதும் உண்மையேஇந்த பாத்திரபடைப்பு 1601-ல் பல குற்றங்களுக்காக Earl மற்றும் அவரின் சக சூழ்ச்சியாளர்களுக்கு எதிரான ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது என்பதே உண்மை.” இப்படி பல உள்ளன.

ஷேக்ஸ்பியருக்கு எதிரானஆக்ஸ்போர்டுக்கு  சார்பான வாதங்கள் எந்த நிலைப் புள்ளியிலிருந்தும் உறுதியாக இல்லைதற்போது ஆக்ஸ்போர்டுபல்கலைக்கழகத்தில் இருக்கும் Jonathan Bate அவருடைய மதிப்பார்ந்த The Genius of Shakespeare (1998) என்பதில் "படைப்புரிமை குறித்த கருத்து முரண்பாடுஎன்ற அவரின்  அத்தியாயத்தில் அவர் பின்வரும் பாணியில் அறிமுகப்படுத்துகிறார் : “வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறப்பு குறித்து ஒரு புரியா புதிர் நிலவுகிறது. அதுவென்னவென்றால் வில்லியம் ஷேக்ஸ்பியர் Stratford-upon-Avon நகரத்தின் ஒரு நடிகரென்று ஏன் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்?” என்கிறார்.



ஷேக்ஸ்பியரின் பிந்தைய நாடகங்களில் உள்ளபடி, 1601-ல் பெருமைமிக்க earl-ன்  மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த ஆதாரங்கள் அல்லது குறிப்புகள் உட்பட ஆக்ஸ்போர்டு அந்த படைப்புகளின் எழுத்தாளராக இருக்க முடியாதென Bate ஆணித்தரமாக ஆதாரத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

ஷேக்ஸ்பியரின் எந்தவொரு கடிதமும் இப்போது இல்லை என்று Stratfordian களுக்கு எதிரானவர்கள் முறையிடுகின்றனர்இதையே தான் ஓர்லோஃப்பும் மீண்டும் மீண்டும் முறையிடுகிறார். “Venus and Adonis மற்றும் The Rape of Lucrece [ஷேக்ஸ்பியரின் கவிதைகள்மற்றும் அவருடைய எந்தவொரு முழுமையடைந்த  பதிப்பிலும் தொடக்கத்தில் உள்ள எழுத்துக்கள் Earl of Southamptonக்கு எழுதப்பட்டகடிதங்களாக  கருதலாம்என்று Bate சுட்டிக் காட்டுகிறார்அந்த மடல்களின் பணிவான தொனியைக் குறிப்பிட்டுக் காட்டும் அவர், “எலிசபெத்திய சமூகத்திற்கு பிறந்த ஊரின் பெருமை மிகவும் முக்கியமானதாகும்பெருமைமிக்க Earl of Oxford-ன் நாற்பத்தி-மூன்றாவது வயதில், [Lord] Burghley-ன்  இளம் வாரிசுகளில் ஒருவரைக் குறித்து இதுபோன்ற சொற்களை எழுதும் கருத்தானதுஅவரின் சொந்த மரணத்திற்குப் பின்னர் அவர் நாடகங்கள் எழுதியதாக சிந்திப்பதையும் விட மிகவும் கற்பனையாக உள்ளது.”

The Genius of Shakespeare விக்டோரியன் காலத்து இங்கிலாந்திற்குப் பின்னர் தோன்றிய நிலையில்ஸ்டார்போர்டியர்களுக்கு எதிரான வாதத்தை அது விவாதிக்கின்ற  போது, “முதன்முதலாகஆங்கில கலாச்சாரம் உறுதியாக மத்தியதட்டு  வர்க்கமாக இருந்த போதுஅந்த விஷயத்தை திட்டமிட்டு சிக்கலுக்கு உள்ளாக்குவதாகும்அந்த மத்தியதட்டு வர்க்கங்கள்'கீழ்நிலையிலிருந்துவரும் முன்பின் தெரியாதவர்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமாகவும், 'மேல்நிலையிலிருக்கும்பிரமுகர்களுக்கு மிகவும் பொறுப்புடனும் இருந்தனர். … எதிர்-ஸ்டான்போர்டியனிசம்  William of Stratford-ஐ விவசாயியாக ஆக்குகிறதுஅவரை தூர விலக்கி வைக்கிறதுமேலும் அது காணும் ஏதாவதொரு பிரபுக்கு அவரின் படைப்புகளை அர்பணிக்கிறது.”

Earl of Oxford-ன் காரணத்தை வெற்றிகொள்ளும் Who Was Shakespeare?  (1955) என்றதலைப்பிட்டஇருபதாம் நூற்றாண்டிற்கு மத்தியில் வெளியான சட்டவழக்கறிஞரான  Christmas Humphreys-ன் முதல் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை Bate மேற்கோளிடுகிறார். Earl of Oxford கூறும் காரணம் இதுதான் : “இது மேதைக்கு எதிரானது நம்முடைய தேசிய மதிப்பிற்கு எதிரானது ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மற்றும் கவிதைகளின் உண்மையான ஆசிரியரை விட்டுவிட்டு ஒரு குறுகிய-புத்தியுள்ள வணிகரின் நினைவுகளை மதிப்பது நாடகத்தைக் குறித்த நம்முடைய நேர்மையான உணர்வை அவமதிப்பாகும்புறக்கணிப்பதாகும். அனைத்திற்கும் மேலாகஒரு தலைசிறந்த மனிதரின் படைப்பாகவும், எலிசபெத்திய கால இங்கிலாந்திற்கு மிகவும் நெருக்கமானவரின் படைப்பாகவும் பார்க்கும் போது அந்த நாடகங்கள் இன்னும் சுவாரசியமாக இருப்பதைக்  காண்கிறேன்.”

அதற்கு பொருத்தமாக Bate கூறுவது, "'நம்முடைய தேசிய கண்ணியம்', 'ஒரு குறுகிய-புத்தி வணிகர்', 'ஒரு தலையாய மனிதர்', ஆகிய இந்த மூன்றுசொற்களுமே மொத்த கதையையும் கூறுகின்றனஇங்கிலாந்தின் ஏனைய பல கேள்விகளைப் போலவேஇதுவும் ஒரு வர்க்கக்கேள்வியாகும்.”

Anonymous திரைப்படம் ஒரு சோம்பேறித்தனமானகவனக் குறைவான, பொறுப்பற்றஇப்போதையமூன்றாந்தரஹாலிவுட்பகட்டுபின் நவீனத்துவ-பிரச்சாரத்தோடு  ஷேக்ஸ்பியரின்  "படைப்புகள் மீதான கருத்து முரண்பாட்டை" அளிக்கிறதுதுரோகமும்மோசடியும் இங்கே ஓர்லோஃப் மற்றும் எமெரீச்சினுடையவையே.

நன்றி : World Socialist Website


No comments:

Post a Comment